India
இந்தியாவில் பிப்ரவரியில் கொரோனா 3வது அலை.. IIT பேராசிரியரின் எச்சரிக்கை என்ன?
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உருமாறிக் கொண்டே வருவது மக்களை அச்சமடைய வைத்துள்ளது. ஏற்கனவே டெல்டா, டெல்டா பிளஸ் என உருமாறிய கொரோனா தொற்று தற்போது ஒமைக்ரான் தொற்றாக உருமாற்றம் அடைந்துள்ளது.
இந்த ஒமைக்ரான் தொற்று டெல்டா பிளஸ் தொற்றை விட மிகவும் வேகமாகப் பரவக்கூடியது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதுவரை ஒமைக்ரான் 38 நாடுகளில் பரவியுள்ளது.
அமெரிக்காவில் மட்டும் 11 மாகாணங்களில் ஒமைக்ரான் வைரஸ் ஊடுருவியுள்ளது. அதேபோல், வயதானவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படும் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தியாவில் பிப்ரவரியில் மூன்றாவது அலை ஏற்படலாம் என ஐ.ஐ.டி பேராசிரியர் மனீந்திர அகர்வால் எச்சரிக்கை செய்துள்ளார். இதுகுறித்து மனீந்திர அகர்வால், "ஒமைக்ரான் தொற்றால் இந்தியாவில் பிப்ரவரியில் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இது இரண்டாம் அலையை விட பாதிப்பு குறைவாகவே இருக்கும்.
தினந்தோறும் 1.5 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்படலாம். ஒமைக்ரான் தொற்றைப் பார்க்கும்போது, டெல்டா தொற்று ஏற்படுத்திய தாக்கத்தைக் காட்டிலும் பாதிப்பு குறைவாகத்தான் இருக்கும். தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவினாலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது. கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை உரிய முறையில் கடைபிடித்தால் பரவலைத் தடுக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? 15 நாள்.. 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள்” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
”தவெக ஆட்சியில் குற்றவாளிகளின் கூடாரமாக தமிழ்நாடு.. வாய் திறப்பாரா முதல்வர் விஜய்?” : முரசொலி விமர்சனம்!
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!