India
“அழுகிய நிலையில் 15 மாதங்களாக கிடந்த சடலம்” : ESI மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
பெங்களூரு ராஜாஜி நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம் காரணமாக அழுகிய நிலையில் 15 மாதங்களாக கிடந்த இரண்டு சடலம் கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு ராஜாஜிநகர் செயல்பட்டு வரும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில், துர்நாற்றம் வெளியேற்றியதை தொடர்ந்து இத்தகைய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சாமராஜப்பேட்டை துர்கா மற்றும் கே.பி அக்ரஹாரபகுதியை சேர்ந்ந முனிராஜ் ஆகிய இருவர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 15 மாதங்களுக்கு முன் இ.எஸ்ஐ மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
அப்போது நோய்ப்பரவல் அதிகமாக இருந்தால் உறவினரிடம் சடலங்களை ஒப்படைக்காமல் பெங்களூர் மாநகராட்சியே இறுதி அடக்கம் செய்து வந்தது. இந்த நிலையில். அந்த இருவரின் சடலங்கள் கடந்த 15 மாதங்களாக ஊழியர்களின் கவனக்குறைவால் மருத்துவ கிடங்கின் சவபெட்டி வைக்கும் பகுதியில் இருந்தது தெரியவந்துள்ளது.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!