India
“பா.ஜ.க ஆளும் பீகார், உ.பி, ம.பி மாநிலங்களில் ஏழைகள் அதிகம்” : நிதி ஆயோக் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இதோ!
இந்தியாவில் உள்ள மாநிலங்களின் கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத் தரம் என 12 முக்கிய அம்சங்களை உள்ளடக்கி பொருளாதார ஏழ்மை நிலை குறித்து நிதி ஆயோக் ஆய்வு ஒன்று நடத்தியுள்ளது.
இந்த ஆய்வு முடிவில் பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேகாலயா போன்ற மாநிலங்களில் ஏழைமக்கள் அதிகம் இருப்பதாகத் அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.
நீதி ஆயோக் வெளியிட்டுள்ள ஏழ்மை குறியீட்டின் அறிக்கையில், பீகார் மக்கள் தொகையில் 51.91% பேர் வறுமையில் உள்ளனர். அதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தில் 41.16% பேரும், உத்தர பிரதேசத்தில் 31.79% பேரும் வறுமையில் இருக்கின்றனர். இந்த மாநிலங்களில் முதல் மூன்று இடத்தைப் பிடித்துள்ளன.
அதேபோல் மத்திய பிரதேசத்தில் 36.65% பேரும், மேகாலயாவில் 32.67% பேரும் ஏழைகள் உள்ளனர். மேலும் கேரளா 0.71%, கோவா 3.76 %, சிக்கிம் 3.82%, தமிழ்நாடு 4.89%, பஞ்சாம் 5.59 % பெற்று கடைசி ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.
இந்த புள்ளிவிவர தகவலைப் பார்க்கும் போது பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் அதிக மக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகள் கிடைப்பது கூட இம்மாநில மக்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளதையும் பார்க்க முடிகிறது.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !