India
“பா.ஜ.க ஆளும் பீகார், உ.பி, ம.பி மாநிலங்களில் ஏழைகள் அதிகம்” : நிதி ஆயோக் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இதோ!
இந்தியாவில் உள்ள மாநிலங்களின் கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத் தரம் என 12 முக்கிய அம்சங்களை உள்ளடக்கி பொருளாதார ஏழ்மை நிலை குறித்து நிதி ஆயோக் ஆய்வு ஒன்று நடத்தியுள்ளது.
இந்த ஆய்வு முடிவில் பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேகாலயா போன்ற மாநிலங்களில் ஏழைமக்கள் அதிகம் இருப்பதாகத் அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.
நீதி ஆயோக் வெளியிட்டுள்ள ஏழ்மை குறியீட்டின் அறிக்கையில், பீகார் மக்கள் தொகையில் 51.91% பேர் வறுமையில் உள்ளனர். அதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தில் 41.16% பேரும், உத்தர பிரதேசத்தில் 31.79% பேரும் வறுமையில் இருக்கின்றனர். இந்த மாநிலங்களில் முதல் மூன்று இடத்தைப் பிடித்துள்ளன.
அதேபோல் மத்திய பிரதேசத்தில் 36.65% பேரும், மேகாலயாவில் 32.67% பேரும் ஏழைகள் உள்ளனர். மேலும் கேரளா 0.71%, கோவா 3.76 %, சிக்கிம் 3.82%, தமிழ்நாடு 4.89%, பஞ்சாம் 5.59 % பெற்று கடைசி ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.
இந்த புள்ளிவிவர தகவலைப் பார்க்கும் போது பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் அதிக மக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகள் கிடைப்பது கூட இம்மாநில மக்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளதையும் பார்க்க முடிகிறது.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!