India
கிரிப்டோ கரன்ஸிக்கு தடை: டிஜிட்டல் கரன்சிகளை ஒழுங்குபடுத்தும் மசோதாவை தாக்கல் செய்ய பாஜக அரசு முடிவு?
இந்தியாவில், கடந்த சில ஆண்டுகளாகவே கிரிப்டோ கரன்ஸி பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக கொரோனா தொற்றுக்குப் பிறகு கிரிப்டோ கரன்ஸியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. சுமார் 1.5 கோடி பேர் கிரிப்டோ கரன்ஸியில் ரூ.40 ஆயிரம் கோடிக்குப் பணம் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் கிரிப்போட கரன்ஸிகள் மூலம் தீவிரவாதிகளுக்குப் பணம் செல்ல வாய்ப்புண்டு என அண்மையில் பிரதமர் மோடி பேசியுள்ளார். அதேபோல் கடந்த வாரம் அதிகாரிகளுடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து கிரிப்டோ கரன்ஸி இந்திய நாட்டின் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக உருவெடுக்கக் கூடும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கவலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியாவில் கிரிப்டோ கரன்ஸிக்கு ஒன்றிய அரசு தடை விதிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த வாரம் நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரில் கிரிப்டோ கரன்ஸி தடை குறித்தும் டிஜிட்டல் கரன்சிகளை ஒழுங்குபடுத்தும் மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒருவேலை ஒன்றிய அரசு கிரிப்டோ கரன்ஸிக்கு தடைவிதித்தால் அதில் முதலீடு செய்தவர்களின் பணம் என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் அதில் முதலீடு செய்தவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டை பின்பற்றும் கர்நாடகா... அரசு பேருந்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பயணம் !
-
6 மாவட்டங்களில் விளையாட்டுக்காக முக்கிய திட்டங்கள்.. அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர் - விவரம்!
-
தமிழ்நாட்டின் பக்கம் நிற்காமல், டெல்லிக்குத் துணைபோகிறார் பழனிசாமி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!