India
வேளாண் சட்டம்: "தோற்று விடுவோம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இது" - பிரதமர் மோடியை சாடிய CPIM செயலாளர்!
சென்னை தியாகராய நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஒன்றிய அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்றதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஓராண்டு காலம் சிறப்பாக நடைபெற்றது. விவயாசாயிகளின் போராட்டத்திற்கு மோடி அரசு அடிபணிந்துள்ளது. விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என கூறினார்.
வேளாண் சட்டத்தில் போராட்டத்தில் உயிரிழந்த 700-ம் மேற்பட்ட விவசாயிகளுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம். இந்த போராட்டத்தின் வெற்றி கார்ப்பரேட்களுக்கு கிடைத்த மரண அடி என்றும் திமுக அரசு வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. இந்த சட்டத்தை விவசாயிகளுக்கு புரியவில்லை என மோடி கூறுவது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போன்றதாகும்.
இப்போதும் இந்த சட்டத்தின் தீமைகள் குறித்து பிரதமர் மோடிக்கு புரியாதது வருத்தமளிக்கிறது. தமிழகத்தில் வேளாண் சட்டத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.
தேர்தலுக்கு முன்னரே தோற்று போயுள்ளோம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் பிரதமர் மோடி வேளாண் சட்டத்தை பின் வாங்கியதற்கான அறிவிப்பு. வேளாண் சட்டத்தை திரும்ப பெற்றதன் மூலம் விரைவில் நடைபெறவுள்ள 5 மாநில தேர்தல்களில் வெற்றி பெற முடியாது.
பெட்ரோல், டீசல் மீதான் வரியை மத்திய அரசு முழுக்க முழுக்க அனுபவித்துகொண்டு மாநில அரசுக்கு எதிராக தமிழக பாஜக போராட்டம் நடத்துவது கபட நாடகம் என விமர்சித்த அவர், மோடிக்கு அடுத்து வேளாண் சட்டத்தை இந்தியாவிலே அதிகமாக ஆதரித்தது பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இனியாவது தங்களது தவறுகலிலிருந்து திருத்திக்கொள்ள வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
Also Read
-
“சட்டப்பேரவையில் தரம் தாழ்ந்து பேசாதீங்க”... : அமைச்சர் நிர்மல்குமாருக்கு கே.என்.நேரு பதிலடி!
-
த.வெ.க அரசு எந்தத் திசையில் செல்கிறது? : சர்ச்சை சுற்றறிக்கை - தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
வெளியாகும் சுற்றறிக்கை.. திரும்பப்பெறும் தவெக அரசு?.. முதல்வரை மிஞ்சிய சூப்பர் பவர் யார்? : திமுக கேள்வி!
-
“தவெக 100 நாள் ஆட்சி.. 18 சாதனைகள் இல்லை..பதினெட்டும் ஓட்டைகள்” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
“தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும்!” : உதயநிதி அறிவுறுத்தல்!