India
வெள்ளிக் கொலுசுக்கு ஆசைப்பட்டு பெண்ணின் காலை வெட்டிய திருடன்: ராஜஸ்தானில் அதிர்ச்சி!
ராஜஸ்தான் மாநிலம், சார்புஜா கிராமத்தைச் சேர்ந்தவர் கன்குபாய். இவர் கடந்த திங்களன்று வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் தனது கணவருக்காக உணவு எடுத்துக் கொண்டு வந்தார். பின்னர்,உணவு கொடுத்து வீட்டு வீட்டிற்குத் திரும்பினார்.
இதையடுத்து வேலைகளை முடித்து விட்டு அந்த பெண்ணின் கணவர் வீட்டிற்குச் சென்ற போது அவரது மனைவி காணவில்லை. இது குறித்து குழந்தையிடம் கேட்டுள்ளார். இதற்குக் குழந்தைகள் காலையில் சென்ற அம்மா பிறகு வீட்டிற்கு வரவில்லை என கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கம் விசாரித்துள்ளார். எங்கு தேடியும் அவர் கிடைக்காதை அடுத்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது காட்டுப்பகுதியில் கால்கள் வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் சடலம் கிடைப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. பிறகு அங்குச் சென்ற போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இவர் குறித்து விசாரணை நடத்தியதில் காணாமல் போன பெண் என்பது தெரியவந்தது.
அதேபோல், அந்த பெண் காலில் அணிந்திருந்த வெள்ளிக் கொலுசுக்காக அவரது காலை வெட்டி கொலை செய்யப்பட்டம் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
“விஜய் இன்னும் அசெம்பிள் ஆகாத என்ஜின்” : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்!
-
ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்களின் நலன் காப்பதில் முன்னனி மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு!
-
தமிழ் மொழியுணர்வுக்கான காரணங்களைப் புரிந்துகொள்ள... ‘உயிர் நிகர் தமிழ்‘ நூல்! : முழு விவரம் உள்ளே!
-
ஊழல்வாதிகளை சுத்தம் செய்யும் 'வாஷிங் மெஷின்': பாஜக ஃபார்முலா மகாராஷ்டிர மாநிலத்தில் கிழிந்து தொங்குகிறது!