India
வெள்ளிக் கொலுசுக்கு ஆசைப்பட்டு பெண்ணின் காலை வெட்டிய திருடன்: ராஜஸ்தானில் அதிர்ச்சி!
ராஜஸ்தான் மாநிலம், சார்புஜா கிராமத்தைச் சேர்ந்தவர் கன்குபாய். இவர் கடந்த திங்களன்று வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் தனது கணவருக்காக உணவு எடுத்துக் கொண்டு வந்தார். பின்னர்,உணவு கொடுத்து வீட்டு வீட்டிற்குத் திரும்பினார்.
இதையடுத்து வேலைகளை முடித்து விட்டு அந்த பெண்ணின் கணவர் வீட்டிற்குச் சென்ற போது அவரது மனைவி காணவில்லை. இது குறித்து குழந்தையிடம் கேட்டுள்ளார். இதற்குக் குழந்தைகள் காலையில் சென்ற அம்மா பிறகு வீட்டிற்கு வரவில்லை என கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கம் விசாரித்துள்ளார். எங்கு தேடியும் அவர் கிடைக்காதை அடுத்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது காட்டுப்பகுதியில் கால்கள் வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் சடலம் கிடைப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. பிறகு அங்குச் சென்ற போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இவர் குறித்து விசாரணை நடத்தியதில் காணாமல் போன பெண் என்பது தெரியவந்தது.
அதேபோல், அந்த பெண் காலில் அணிந்திருந்த வெள்ளிக் கொலுசுக்காக அவரது காலை வெட்டி கொலை செய்யப்பட்டம் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
மின்துறை வெள்ளை அறிக்கை : உண்மையை திட்டமிட்டே மறைத்த த.வெ.க அமைச்சர்... அம்பலப்படுத்திய செந்தில் பாலாஜி!
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
கொலை நகரான தலைநகரம் : சென்னை தியாகராயநகரில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்!
-
கோவையில் அத்துமீறல்: காவல் நிலையத்தையும் விட்டுவைக்காத த.வெ.க.வினரின் விளம்பர மோகம்!