India
வெள்ளிக் கொலுசுக்கு ஆசைப்பட்டு பெண்ணின் காலை வெட்டிய திருடன்: ராஜஸ்தானில் அதிர்ச்சி!
ராஜஸ்தான் மாநிலம், சார்புஜா கிராமத்தைச் சேர்ந்தவர் கன்குபாய். இவர் கடந்த திங்களன்று வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் தனது கணவருக்காக உணவு எடுத்துக் கொண்டு வந்தார். பின்னர்,உணவு கொடுத்து வீட்டு வீட்டிற்குத் திரும்பினார்.
இதையடுத்து வேலைகளை முடித்து விட்டு அந்த பெண்ணின் கணவர் வீட்டிற்குச் சென்ற போது அவரது மனைவி காணவில்லை. இது குறித்து குழந்தையிடம் கேட்டுள்ளார். இதற்குக் குழந்தைகள் காலையில் சென்ற அம்மா பிறகு வீட்டிற்கு வரவில்லை என கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கம் விசாரித்துள்ளார். எங்கு தேடியும் அவர் கிடைக்காதை அடுத்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது காட்டுப்பகுதியில் கால்கள் வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் சடலம் கிடைப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. பிறகு அங்குச் சென்ற போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இவர் குறித்து விசாரணை நடத்தியதில் காணாமல் போன பெண் என்பது தெரியவந்தது.
அதேபோல், அந்த பெண் காலில் அணிந்திருந்த வெள்ளிக் கொலுசுக்காக அவரது காலை வெட்டி கொலை செய்யப்பட்டம் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!