India
பென்ஸ் கார் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம்; கட்டிய மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவர் - பஞ்சாபில் கொடூரம்
பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. 2003ம் ஆண்டே மேட்ரிமோனி மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் கொடுமைப்படுத்தியவருக்கும் திருமண நடந்திருக்கிறது. இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகளும் இருக்கின்றனர்.
திருமணமானது முதலே கணவரும் அவரது பெற்றோரும் தொடர்ந்து வரதட்சணை கேட்டு அப்பெண்ணை துன்புறுத்தி வந்திருக்கின்றனர். இருப்பினும் பெண்ணின் பெற்றோர் தங்கம், வெள்ளி போன்றவற்றை கொடுத்திருக்கின்றனர்.
ஆனாலும் S-clas மெர்சிடிஸ் பென்ஸ் காரும் வேண்டும் என கணவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறார். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் மனைவியையும் 2 மகன்களையும் வெளியேற்றியிருக்கிறார்.
இதனையடுத்து சமாதானம் பேசச் சென்றபோது 50 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என மீண்டும் நிர்பந்திருக்கிறார். அதற்கும் அந்த பெண் மறுத்ததால் அவரது துப்பாட்டாவால் நெரித்து அறையில் அடைத்து வைத்திருக்கிறார்.
தொடர்ந்து அவரை கணவரின் பெற்றோர் துன்புறுத்தியதோடு, உறவினர்களுடன் கூட்டு சேர்ந்த கட்டிய மனைவியையே கணவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதனால் சுயநினைவை இழந்த அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இதனிடையே பெண்ணை கொடுமைப்படுத்திய கணவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உதவி காவல் ஆய்வாளர் அம்ரித்பால் சிங் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால்; தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள்!” - முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?