India
சிகிச்சைக்குப் பணம் கொடுக்க மறுத்த தந்தை.. விரக்தியில் விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவர்!
தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தவர் சாய்குமார். இவர் கல்லூரியில் பணியாற்றுபவரின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.
அப்போது விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில் இருசக்கர வாகனம் சேதடைந்துள்ளது. மேலும் வாகனம் மோதியதில் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் காயமடைந்தவர்கள் சாய்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் நடந்த சம்பவத்தை சாய்குமார் தந்தையிடம் கூறி இருசக்கர வாகனத்தை சரி செய்யவும், காயமடைந்த இளைஞர்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் பணம் கொடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.
அப்போது அவரது தந்தை பணம் கொடுக்க முடியாது எனக் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சாய்குமார் என்ன செய்வது என்று தெரியாமல் கல்லூரியின் மூன்றாவது தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
அண்ணா வழியில் அயராது உழைப்போம்! சட்டமன்றத் தேர்தலில் உறுதியாக வெல்வோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
சட்டம் ஒழுங்கு பற்றிப் பேச என்ன யோக்கியதை உண்டு? : பழனிசாமி ஆட்சியின் அவலங்களை நினைவூட்டிய முரசொலி!
-
“கருப்பு, சிவப்பு, நீலம் கொள்கைகள் மதவாதத்தை வீழ்த்தும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
“ரயில் திட்டங்களில் தமிழ்நாடு முழுமுற்றாக புறக்கணிப்பு” : சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்துள்ள ஒன்றிய அரசு : மெட்ரோ முதல் நிதிப்பகிர்வு வரை பெரும் ஏமாற்றம்!