India
சிகிச்சைக்குப் பணம் கொடுக்க மறுத்த தந்தை.. விரக்தியில் விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவர்!
தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தவர் சாய்குமார். இவர் கல்லூரியில் பணியாற்றுபவரின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.
அப்போது விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில் இருசக்கர வாகனம் சேதடைந்துள்ளது. மேலும் வாகனம் மோதியதில் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் காயமடைந்தவர்கள் சாய்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் நடந்த சம்பவத்தை சாய்குமார் தந்தையிடம் கூறி இருசக்கர வாகனத்தை சரி செய்யவும், காயமடைந்த இளைஞர்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் பணம் கொடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.
அப்போது அவரது தந்தை பணம் கொடுக்க முடியாது எனக் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சாய்குமார் என்ன செய்வது என்று தெரியாமல் கல்லூரியின் மூன்றாவது தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!