India
“எருமை மாடு பால் கறக்க விடமாட்டேங்குது...” : காவல் நிலையத்தில் புகார் அளித்த விவசாயி - ம.பியில் வினோதம்!
மத்திய பிரதேச மாநிலம் பிண்ட் பகுதியைச் சேர்ந்தவர் பாபுலால் ஜாதவ். விவசாயியான இவர் தனது வீட்டில் எருமை மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். சில நாட்களாக எருமை மாடு பால் கறக்க யாரையும் அனுமதிக்கவில்லை.
இதுகுறித்து கிராமத்தில் இருப்பவர்களிடம் பாபுலால் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் மாட்டுக்கு யாராவது பில்லி சூனியம் வைத்திருப்பார்கள் எனக் கூறியுள்ளனர். இதையும் பாபுலால் நம்பியுள்ளார்.
இருப்பினும் பால் கறக்க முயன்றும் எருமை பாடு பால் கறக்க பாபுலாலை அனுமதிக்கவில்லை. இதனால் விவசாயி பாபுலால், பால் கறக்க எருமை மாடு அனுமதிக்க மறுக்கிறது எனக் கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதைக் கேட்ட போலிஸார் அவரிடம் கால்நடை மருத்துவமனைக்கு செல்லும்படி கூறினர். ஆனால் சில மணி நேரத்திலேயே எருமை மாட்டை காவல்நிலையம் அழைத்துக் கொண்டு வந்து மீண்டும் புகார் கொடுத்துள்ளார்.
அப்போது போலிஸார் விவசாயியிடம், மாட்டிற்கு ஏதாவது உடல்நலப் பிரச்சனை இருக்கும் எனவே கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் எனக் கூறி அவரை காவல்நிலையத்தில் இருந்து அனுப்பிவைத்தனர். பின்னர் பாபுலால் காவல்நிலையம் வந்து சென்ற நான்கு மணி நேரம் கழித்து மீண்டும் காவல் நிலையத்திற்கு வந்தார்.
அப்போது போலிஸாரிடம், மாடு பால் கறக்க அனுமதி கொடுத்துவிட்டதாகக் கூறி மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். இந்த வினோத சம்பவம் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!