India
“பசுவின் கோமியம், சாணம்தான் இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்தும்” : சிவராஜ் சிங் சவுகானின் சர்ச்சை பேச்சு!
இந்திய கால்நடைப் பராமரிப்பு கூட்டமைப்பு சார்பில் போபால் நகரில் நேற்று மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் ரூபாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது அந்த நிகழ்வில் பேசிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், "பசுவின் கோமியம், சாணத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தையும், தனிநபரின் வருமானத்தையும் வலுப்படுத்த முடியும்.
மேலும் உடல்கள் எரியூட்டும் இடங்களில் கூட விறகுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட வரட்டிகளைப் பயன்படுத்தலாம். இப்படிச் செய்தால் மரக்கட்கைளின் பயன்பாடும் குறைவாகவே இருக்கும்.
மத்திய பிரதேச மாநிலத்தில் கூட இரண்டு பசு காப்பகங்கள் மற்றும் பராமரிப்பு இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி மத்திய பிரேத அரசு மட்டும் தனித்துச் செயல்படுத்த முடியாது. சமூகத்தின் பங்களிப்பும் அவசியமானது.
மேலும், சிறு விவசாயிகள், கால்நடை உரிமையாளர்களுக்கு எவ்வாறு கால்நடை வளர்ப்பு லாபமான தொழிலாக மாற்ற முடியும் என்பது குறித்து மருத்துவர்களும், வல்லுநர்களும் தீர்வுகாண வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
"எப்படி ஒரு முதல்வராகல் இப்படிய எல்லாம் யோசிக்க முடிகிறது" என இணையத்தில் பலரும் சிவராஜ் சிங் சவுகானின் இந்த பேச்சை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
Also Read
-
பரந்தூர் ரத்துக்குப் பின் இருக்கும் சதிகள் : தமிழ்நாட்டின் வளர்ச்சி மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக்!
-
“எனதருமை மலையாள உடன்பிறப்புகள் அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துகள்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“கேப்டன் விஜயகாந்த் புகழ் ஓங்குக” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி!
-
“மீலாதுன் நபியைக் கொண்டாடிடும் இசுலாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
கர்நாடகாவில் 3 தமிழர்கள் படுகொலை: தொடர் சித்திரவதை.. முறிந்த விலா எழும்பு.. Post Mortem அறிக்கை சொல்வது?