India
“மருத்துவ துறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய இளம் பத்திரிகையாளர் எரித்துக்கொலை” : பீகாரில் நடந்த கொடூரம்!
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்திற்குட்பட்ட பெனிபேட்டி பகுதியைச் சேர்ந்தவர் புத்திநாத் ஜா. இவர் உள்ளூர் செய்தி இணையதளம் ஒன்றில் பத்திரிகையாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் செயல்பட்ட வந்தார்.
இவர் தனது பகுதியில் செயல்பட்டு வந்த போலி மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளைத் தனது செய்திகள் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார். இதனால் அரசு அதிகாரிகள் போலி மருத்துவமனைகளுக்கு சீல் வைத்துள்ளனர்
இந்நிலையில், கடந்த செவ்வாயன்று ஒரு மருத்துவமனையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஃபேஸ்புக்கில் தகவல் வெளியிட்டுள்ளார். பின்னர் அன்று இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் பிறகு வீடுதிரும்பவில்லை.
இதையடுத்து போலிஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் புத்திநாத்ஜாவின் செல்போன் சிங்னல் பெடோன் என்ற இடத்தை காட்டியுள்ளது. அங்குச் சென்று பார்த்தபோது அவரது செல்போன் மட்டுமே போலிஸாருக்கு கிடைத்தது.
இந்நிலையில் புத்திநாத்ஜா காணாமல் போய் ஐந்து நாட்களுக்கு பிறகு பெடோன் அருகே புதருக்குள் எரிந்த நிலையில் அவரது சடலத்தை போலிஸார் கண்டு பிடித்தனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பத்திரிகையாளர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”நிதியும் கிடையாது நீதியும் கிடையாது - தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இந்திய அரசியலில் மத வெறுப்பு அதிகரித்துள்ளது...” - நடிகை வித்யா பாலன் ஓபன் டாக் !
-
குஜராத் மாநிலத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு : தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த பா.ஜ.க வேட்பாளர்கள்!
-
கொளுந்துவிட்டு எரிந்த கட்டடம்... யோசிக்காமல் 50 பேரின் உயிரை காப்பாற்றிய துணிகர சிறுவனுக்கு பாராட்டுகள் !
-
”கொஞ்சம் கூட கருணை இல்லாத மோடி அரசு” : செல்வப்பெருந்தகை விமர்சனம்!