India
“மருத்துவ துறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய இளம் பத்திரிகையாளர் எரித்துக்கொலை” : பீகாரில் நடந்த கொடூரம்!
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்திற்குட்பட்ட பெனிபேட்டி பகுதியைச் சேர்ந்தவர் புத்திநாத் ஜா. இவர் உள்ளூர் செய்தி இணையதளம் ஒன்றில் பத்திரிகையாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் செயல்பட்ட வந்தார்.
இவர் தனது பகுதியில் செயல்பட்டு வந்த போலி மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளைத் தனது செய்திகள் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார். இதனால் அரசு அதிகாரிகள் போலி மருத்துவமனைகளுக்கு சீல் வைத்துள்ளனர்
இந்நிலையில், கடந்த செவ்வாயன்று ஒரு மருத்துவமனையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஃபேஸ்புக்கில் தகவல் வெளியிட்டுள்ளார். பின்னர் அன்று இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் பிறகு வீடுதிரும்பவில்லை.
இதையடுத்து போலிஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் புத்திநாத்ஜாவின் செல்போன் சிங்னல் பெடோன் என்ற இடத்தை காட்டியுள்ளது. அங்குச் சென்று பார்த்தபோது அவரது செல்போன் மட்டுமே போலிஸாருக்கு கிடைத்தது.
இந்நிலையில் புத்திநாத்ஜா காணாமல் போய் ஐந்து நாட்களுக்கு பிறகு பெடோன் அருகே புதருக்குள் எரிந்த நிலையில் அவரது சடலத்தை போலிஸார் கண்டு பிடித்தனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பத்திரிகையாளர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
வடகிழக்கு பருவமழை... சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - விவரம் உள்ளே!
-
பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதியை கட்ட தடை கோரி வழக்கு : அபாரதத்துடன் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!
-
பீகாரில் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி தேர்வு... - அதிகாரபூர்வமாக வெளியான அறிவிப்பு !
-
திமுக ஆட்சியில் குறைந்துவரும் கொலை வழக்குகள்... தினமலரே வெளியிட்ட ஆதாரம் - முரசொலி தலையங்கம் !
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!