India
“ஒரு டோஸ் கூட போடலையா..? அப்போ பெட்ரோல், ரேஷன் பொருட்கள் இல்லை” : கலெக்டர் உத்தரவால் மக்கள் அதிர்ச்சி!
இந்தியாவில் கொரோனா பரவியதை அடுத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாட்டில் இதுவரை 100 கோடிக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து முதல் தவணை தடுப்பூசியை அதிகமான மக்கள் போட்டுள்ளதால், இரண்டாவது தவணைக்கு முக்கியத்துவம் கொடுத்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஒரு தவணை கூட தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள், பெட்ரோல், கேஸ் சிலிண்டர் வழங்கப்படாது என மகாராஷ்டிர மாநிலத்தின் அவுரங்காபாத் ஆட்சியர் அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவுரங்காபாத் மாவட்ட ஆட்சியர் சுனில் சவான் செவ்வாயன்று வெளியிட்டுள்ள உத்தரவு ஒன்றில், "ஒரு தவணை கூட தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள், பெட்ரோல், கேஸ் சிலிண்டர் வழங்கப்படாது.
எனவே பணியில் இருக்கும் ஊழியர்கள் கொரோனா சான்றிதழ்களை மக்கள் காட்டிய பிறகே அவர்களுக்குப் பொருட்களை வழங்கவேண்டும். இந்த நடைமுறையைப் பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 74% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மாவட்ட வாரியாக கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் விவரம் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 36 மாவட்டங்களில் அவுரங்காபாத் 26வது இடத்தை பெற்றுப் பின்தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
73 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் : ஊட்டிக்கே இந்த நிலையா ? - கொதிக்கும் கோடை வெப்பம் !
-
பள்ளத்தில் கவிழ்ந்த கார் : இரவில் கணவன், மனைவிக்கு நேர்ந்த சோகம்!
-
"களத்தில் என்ன செய்யவேண்டும் என எனக்கு தெரியும்" - விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி !
-
”போராடி பெற்ற நமது உரிமைகளை பறிக்கும் மோடி அரசு” : தீஸ்தா சீதல்வாட் குற்றச்சாட்டு!
-
"திறமையற்ற தலைவர் மோடி" - இந்திய பயணத்தை ஒத்திவைத்து சீன பிரதமரை சந்திக்க சென்ற எலான் மஸ்க் !