India
"ரூ.4 லட்சம் கோடியைப் பிரித்துக் கொடுக்க வேண்டும்": மோடி அரசுக்கு மம்தா கிடுக்குப்பிடி!
இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்ததிலிருந்தே பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வலியுறுத்தி வந்தனர். ஆனால் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு குறைக்கவில்லை.
அண்மையில் நடைபெற்ற 13 மாநில இடைத்தேர்தலில் பா.ஜ.க படுதோல்வியடைந்தை அடுத்து, அடுத்து நடைபெறவிருக்கும் 5 மாநில தேர்தலை கருத்தில் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய பா.ஜ.க அரசு குறைத்துள்ளது.
இருந்தபோதும் பெட்ரோல் 100 ரூபாய்க்கு அதிகமாகவே அனைத்து மாநிலங்களிலும் விற்கப்பட்டு வருகிறது.மேலும் பா.ஜ.க தலைவர்கள் அனைத்து மாநில முதல்வர்களும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வினால் கிடைத்துள்ள ரூ.4 கோடியை மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு புதிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இது குறித்து நேற்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசுகையில், "ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்ரேவை தேர்தலை கருத்தில் கொண்டே பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்துள்ளது.
பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு வரியின் மூலம் கிடைத்த ரூ. 4 லட்சம் கோடியை ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும். வாட் வரியைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.அப்படி என்றால் மாநிலங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கும்? . நிதி நெருக்கடிகள் இருந்தபோதிலும், மாநிலங்கள் பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி வருகிறது. தேர்தல் நெருங்கும் போது விலையைக் குறைக்கிறார்கள். பின்னர் மீண்டும் விலையை உயர்த்துகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
திருமணத்துக்கு மறுப்பு : 3 நாட்கள் வன்கொடுமை செய்து சூடு போட்ட இளைஞர்-பாஜக ஆளும் உ.பி-யில் தொடரும் அவலம்!
-
“பிரஜ்வல் வீடியோவை நான்தான் பாஜக நிர்வாகியிடம் கொடுத்தேன்...” - அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்த ஓட்டுநர் !
-
எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்தின் எதிரொலி: இறுதியாக வாக்குப்பதிவு விபரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
-
இரக்கமற்ற பிரஜ்வால் ரேவண்ணா : ஓட்டம் பிடிக்க உதவிய பா.ஜ.க!
-
முறைகேடுக்கு வழிவகுக்கும் தேர்தல் ஆணையம்! :எச்சரிக்கும் முன்னாள் தேர்தல் ஆணையர் மற்றும் எதிர்க்கட்சிகள்!