India
“பட்டாசு வெடித்த ஆத்திரத்தில் குழந்தைகளை நோக்கி ஆசிட் வீச்சு.. 2 பெண்கள் படுகாயம்” : என்ன நடந்தது?
உத்தர பிரதேச மாநிலம், பண்டா மாவட்டத்திற்குட்பட்ட கைலாஷ்பூரி பகுதியில் குழந்தைகள் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்குத் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வரும் நபர், பட்டாசு வெடிக்கக் கூடாது என குழந்தைகளிடம் கூறியுள்ளார்.
ஆனால் குழந்தைகள் தொடர்ந்து பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் ஆசிட் பாட்டிலை எடுத்து குழந்தைகள் மீது வீசினார். அப்போது குழந்தைகள் அங்கிருந்து தப்பிச் சென்றதால், அருகே அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் மீது ஆசிட் பட்டதில் அவர்களுக்குத் தீக்காயம் ஏற்பட்டது.
இதைப் பார்த்த அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே இரண்டு பெண்களையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். பிறகு, போலிஸார் அங்கு வருவதற்குள் அந்த வியாபாரி அங்கு இருந்து தம்பிச் சென்றுவிட்டார். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஒடிய வியாபாரியைத் தேடி வருகின்றனர்.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!