India
“மொபைல் சாட்டிங் பழக்கத்திற்காக வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன்” : கோவாவில் கண்டுபிடித்த போலிஸ்!
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திற்குட்பட்ட பத்லாபூர் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் மொபைல் போனில் நண்பர்களுடன் தொடர்ச்சியாக சாட்டிங் செய்து வந்துள்ளார். இச்சிறுவன் எந்த நேரமும் செல்போன் சாட்டிங்கிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் திடீரென சிறுவன் அக்டோபர் 31ம் தேதியிலிருந்து காணவில்லை. இது குறித்துப் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் விசாரணை செய்தனர். இதையடுத்து சிறுவன் பயன்படுத்தும் செல்போனின் ஐ.பி முகரியை போலிஸார் ஆய்வு செய்தனர்.
இதில் அவர் கோவாவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் கோவா சென்று சிறுவனை மூன்று நாட்களுக்குப் பிறகு மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் காணாமல் போனது குறித்து சிறுவனிடம் விசாரித்தபோது, நண்பர்களுடனான செல்போன் சாட்டிங்கில், தங்களை நிரூபிப்பதற்காக வாழ்க்கையில் ஏதாவது செய்ய வேண்டும் என பேசியுள்ளனர்.
இதனால் சிறுவன் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுவனுக்கு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஆலோசனை வழங்க வேண்டும் என பெற்றோரிடம் போலிஸார் அறிவுறுத்தினர்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!