India
“இருமல் டானிக் என நினைத்து தைலத்தை குடித்தவருக்கு ஏற்பட்ட துயரம்” : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். காவலாளியாக பணியாற்றி வந்த இவர் நேற்று இரவு தனது பேரனுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, தொண்டை கரகரப்பாக இருந்ததால் வீட்டிலிருந்த இருமல் மருந்துக்குப் பதில் நீலகிரி தைலத்தைக் குடித்துள்ளார். இதை உணர்ந்த ராஜசேகர் உடனே உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
பிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை ராஜசேகர் உயிரிழந்தார். இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், ராஜசேகர் குடிபோதையில் இருந்ததால் இருமல் டானிக்கிற்குப் பதிலாக தைலத்தைக் குடித்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலிஸார் அவர்களது உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !