India
“இருமல் டானிக் என நினைத்து தைலத்தை குடித்தவருக்கு ஏற்பட்ட துயரம்” : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். காவலாளியாக பணியாற்றி வந்த இவர் நேற்று இரவு தனது பேரனுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, தொண்டை கரகரப்பாக இருந்ததால் வீட்டிலிருந்த இருமல் மருந்துக்குப் பதில் நீலகிரி தைலத்தைக் குடித்துள்ளார். இதை உணர்ந்த ராஜசேகர் உடனே உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
பிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை ராஜசேகர் உயிரிழந்தார். இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், ராஜசேகர் குடிபோதையில் இருந்ததால் இருமல் டானிக்கிற்குப் பதிலாக தைலத்தைக் குடித்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலிஸார் அவர்களது உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“கவர்ச்சியால் வெற்றிபெறாமல், வேறு எதைவைத்து வெற்றிபெற்றீர்கள்?” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பதிலடி!
-
“தமிழ்நாட்டில் என்னவானாலும் ‘விஜய்’ விளக்கமளிக்கப் போவதில்லை!” : கனிமொழி எம்.பி கண்டனம்!
-
டெல்லியில் நடைபெறும் ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் தி.மு.க பங்கேற்காது! : தலைமைக் கழகம் அறிவிப்பு!
-
தமிழ்நாட்டிற்கான 152 மருத்துவ இடங்களை கைவிட்டுவிடக்கூடாது! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தல்!
-
“திருச்சியில் கொடூரம்.. மது கொடுத்து சிறுமிக்கு கூட்டு பா*யல் வன்கொடுமை.. சாலையில் வீசிச் சென்ற அவலம்”