India
“தினமும் 150 கி.மீ பயணம் செய்து பாடம் கற்பிக்கும் ஆசிரியர்” : சாதி பாகுபாட்டால் ஆசிரியருக்கு நேர்ந்த கதி!
குஜராத் மாநிலம், சத்ரியாலா கிராமத்தைச் சேர்ந்தவர் கன்ஹையலால் பரையா. இவர் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரை சில மாதங்களுக்கு முன்பு நிமனா கிராமத்தில் உள்ள பள்ளிக்கு இடம் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித் துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் இவர் தனது கிராமத்தில் இருந்து 150 கிலோமீட்டர் பயணம் செய்து பள்ளிக்குச் சென்று வருவது இவருக்கு சிரமாக இருந்தது. இதனால் நிமனா கிராமத்திலேயே தங்கி பள்ளிக்குச் சென்று வருவதற்காக அங்கு வீடு தேடியுள்ளார்.
அப்போது, அந்த கிராமத்திலிருந்த வீட்டின் உரிமையாளர்கள் பலர், ஆசிரியர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் யாரும் அவருக்கு வீடு கொடுக்க முன்வரவில்லை.
இது குறித்து கல்வித்துறைக்கு ஆசிரியர் கன்ஹையலால் புகார் கொடுத்துள்ளார். ஆனால் இந்த புகார் குறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து தனது கிராமத்திற்கு இடம் மாறுதல் கொடுக்கும் படி கல்வித்துறைக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இது குறித்து ஆசிரியர் கூறுகையில், சாதிய பாகுபாடு காரணமாகப் புறக்கணிக்கப்படுவது குறித்து முதலமைச்சர் புபேந்திர படலுக்குத் தெரிவித்துள்ளேன் என்றும் அவர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதாக தெரிவித்துள்ளார்.
Also Read
-
“2028 ஒலிம்பிக் கிரிக்கெட்.. 6 அணிகள்.. தகுதிச்சுற்று நடைமுறையை வெளியிட்ட ஐசிசி” - முழு விவரம்!
-
4 முறை சாம்பியனை வீட்டிற்கு அனுப்பிய குட்டி நாடு - ஜெர்மனியை வீழ்த்தி பராகுவே கொடுத்த மாஸ் வெற்றி!
-
“தூக்கில் தொங்கிய படி.. காதல் ஜோடி சடலங்கள் மீட்பு.. ஆணவக் கொ*லையா?” - மயிலாடுதுறையில் பரபரப்பு சம்பவம்!
-
“ஏ.டி.எம் கார்டு மூலம் மாத்திரைப் பொடி.. கில்லி சரத்-ஐ என்ன செய்யப்போகிறார் யோக்கியர் விஜய்” - முரசொலி!
-
அமைச்சர் சரத்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் : தி.மு.க. மாணவரணி திட்டவட்டம்!