India
“தூங்கிக்கொண்டிருந்த இளம் பெண்ணின் கழுத்தை அறுத்த காதலன்” : காதலை ஏற்க மறுத்ததால் நடந்த கொடூரம்!
தெலங்கானா மாநிலம், ஐதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் ருக்கிசிங். இளம் பெண்ணான இவர் தனது வீட்டில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டிற்குள் புகுந்த பிரேம் சிங் என்ற இளைஞர் திடீரென தான் எடுத்து வந்திருந்த கத்தியால் ருக்கிசிங்கின் கழுத்தை அறுக்கப் பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண் அவரை தடுத்துக் கத்தியுள்ளார்.
இவரின் சத்தம் கேட்டு வீட்டிலிருந்த பெற்றோர்கள் உடனே பிரேம் சிங்கை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து காவல்நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலிஸார் அந்த இளைஞரைப் பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.
அங்கு விசாரித்த போது பிரேம் சிங், ருக்கிசங்கை காதலித்து வந்துள்ளார். அவரின் காதலைத் தெரிவித்தபோது அதை ருக்கி சிங்க மருத்துள்ளார். இதனால் அவரை கொலை செய்ய பிரேம் சிங் முடிவு செய்தது தெரியவந்தது. மேலும் ருக்கி சிங்கின் உறவினர் பிரேம் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
கழுத்தில் குத்தியதில் ஏற்பட்ட காயத்தினால் ருக்கி சிங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
பொய் அறிக்கை.. சாத்தான்குளமே சாட்சி.. மன்னிப்பு கேட்க வேண்டும்.. - பழனிசாமியை விளாசிய அமைச்சர் ரகுபதி!
-
Covid-ல் அதிமுக ஆட்சியில் நடந்த கொடூரம்... சாத்தான்குளம் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு - விவரம்!
-
மேற்கிலும் உதிக்கும் சூரியன்! - அக்னி நியூஸ் சர்வீசஸ் வெளியிட்ட 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு!
-
”பா.ஜ.க.வின் பகிரங்க திட்டம்... நெருங்கும் ஆபத்து!” : முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி எச்சரிக்கை!
-
சென்னையில் சிக்கிய 10 ஏ.கே 47 துப்பாக்கிகள்... தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை! - முழு விவரம் உள்ளே!