India
“தூங்கிக்கொண்டிருந்த இளம் பெண்ணின் கழுத்தை அறுத்த காதலன்” : காதலை ஏற்க மறுத்ததால் நடந்த கொடூரம்!
தெலங்கானா மாநிலம், ஐதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் ருக்கிசிங். இளம் பெண்ணான இவர் தனது வீட்டில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டிற்குள் புகுந்த பிரேம் சிங் என்ற இளைஞர் திடீரென தான் எடுத்து வந்திருந்த கத்தியால் ருக்கிசிங்கின் கழுத்தை அறுக்கப் பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண் அவரை தடுத்துக் கத்தியுள்ளார்.
இவரின் சத்தம் கேட்டு வீட்டிலிருந்த பெற்றோர்கள் உடனே பிரேம் சிங்கை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து காவல்நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலிஸார் அந்த இளைஞரைப் பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.
அங்கு விசாரித்த போது பிரேம் சிங், ருக்கிசங்கை காதலித்து வந்துள்ளார். அவரின் காதலைத் தெரிவித்தபோது அதை ருக்கி சிங்க மருத்துள்ளார். இதனால் அவரை கொலை செய்ய பிரேம் சிங் முடிவு செய்தது தெரியவந்தது. மேலும் ருக்கி சிங்கின் உறவினர் பிரேம் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
கழுத்தில் குத்தியதில் ஏற்பட்ட காயத்தினால் ருக்கி சிங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
'ஜனநாயகன்' தயாரிப்பாளருக்கு பதவி... மேகதாது விவகாரத்தில் குரல் கொடுப்பாரா? - திருச்சி சிவா கேள்வி!
-
வைரலாகும் வீடியோ... அமைச்சர் சரத்குமார் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாக சந்தேகம்?
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!