India
“பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடினால் தேசதுரோக வழக்கு பாயும்” : மிரட்டல் விடுத்த உ.பி முதல்வர்!
உலக கோப்பை T20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டாடுவோர் மீது தேச துரோக வழக்கு பாயும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
துபாயில் அண்மையில் நடந்த T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை, 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது. இதனை நம் நாட்டில் சிலர் கொண்டாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.
பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய உத்தர பிரதேசத்தை சேர்ந்த 7 பேர் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்து இதுவரை 4 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது தேசத் துரோக சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காஷ்மீரில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி மாணவர்கள், பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதால் அவர்கள் மீது தீவிரவாத தடுப்பு சட்டம் மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை, பாகிஸ்தான் வெற்றியை தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்ஸாக வைத்து அதில், ‛We won' எனப் பதிவிட்டிருந்தார். இதனால் பள்ளி நிர்வாகம் அவரை பணி நீக்கம் செய்தது. மேலும், அவர் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.
Also Read
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!
-
முதலமைச்சர் விஜய் தொகுதியின் அவலம்.. 6 நாட்களாக தண்ணீர் இல்லை.. கோபத்துடன் வீதியில் இறங்கிய மக்கள்!
-
“MISA தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா?” - விஜய்யைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வெகுண்டெழுந்த தி.மு.க!
-
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய்க்கு பயம் : காரணத்தை சொன்ன முரசொலி!
-
“தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்தவர் சாலமன் பாப்பையா” : மு.க.ஸ்டாலின் இரங்கல்!