India
பா.ஜ.க-வில் ஷாருக்கானை சேர்ப்பதற்கு திட்டமா? : மகாராஷ்டிரா அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட 8 பேரைப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு குறித்தான விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் ஆர்யன்கானின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து நடிகர் ஷாருக்கான் சிறைக்குச் சென்று மகன் ஆர்யன்கானை சந்தித்து பேசினார். பின்னர், ஷாருக்கான் வீட்டில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.
இதையடுத்து வழக்கு தொடர்பான ஆதாரம் குறித்துச் சேகரிக்க வந்ததாகப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறினர். இந்நிலையில், நடிகர் ஷாருக்கான் பா.ஜ.கவில் இணைந்தால் போதை பருந்து சர்க்கரையாகிவிடும் என பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாராஷ்டிரா மாநில அமைச்சர் சக்கன் பூஜ்பால், "சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டவர்களின் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானும் ஒருவர்.நடிகர் ஷாருக்கான் மட்டும் பா.ஜ.கவில் சேர்ந்துவிட்டால் போதைப் பொருள் சர்க்கரை தூயாக மாறிவிடும்.
குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் ஒரு பெரிய அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.இது குறித்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்குப் பதில் நடிகர் ஷாருக்கானை வேட்டையாடுகிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”3 ஃபைலை திறந்து பாருங்கள்.. உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“மடைமாற்றும் அரசு.. அமைச்சர் மரிய வில்சனை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் : அன்பில் மகேஸ் அதிரடி!
-
“தவெக அரசால் பரந்தூர் விமான நிலையத்திட்டம் ரத்து.. தமிழ்நாட்டிற்கு கறுப்பு நாள்”: டி.ஆர்.பி.ராஜா காட்டம்!
-
“பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” : உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
ஒரு திட்டம் நாட்டிற்காக வரும்போது, அரசியல் செய்யக்கூடாது : விஜய் அறிவிப்புக்கு தங்கம் தென்னரசு எதிர்ப்பு!