India
“மனைவி உயிரிழந்த சோகம்.. குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கணவரும் தற்கொலை”: கர்நாடகாவில் சோகம்!
கர்நாடக மாநிலம், பெல்காவி மாவட்டம் ஹுக்கேரி தாலுக்காவிற்கு உட்பட்ட போரகல் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர் கடந்த ஜூலை மாதம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர், கொரோனாவில் இருந்து ஜெயஸ்ரீ மீண்டுள்ளார். ஆனால் நில நாட்களிலேயே கருப்புபூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கான சிகிச்சை எடுத்து வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இதையடுதது மனைவி ஜெயஸ்ரீ இறந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் கோபால் இருந்துவந்துள்ளார்.
இந்நிலையில் இன்று தனது குழந்தைகளான சௌமியா, ஸ்வேதா, சாக்ஸி, சுர்ஜன் ஆகிய நான்கு பேருக்கும் தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். இதை குடித்த நான்கு குழந்தைகளும் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தனர்.பின்னர் கோபாலும் தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தைகள் மற்றும் கோபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல”: மீண்டும் பிற்போக்குவாதிகளை கதறவிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
-
அ.தி.மு.க ஆதரவு : “ஊழல் சக்திகள் தயவில் விஜய் ஆட்சி!...” -வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!
-
“இனி நாம் என்ன பண்ணணும்?” : ‘உடன்பிறப்பின் குரல்’ இணையதளம் தொடங்கி கருத்து கேட்கும் கழக தலைவர்!
-
“குதிரை பேரம் குறித்து முதல்வர் விஜய் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?” : திமுக எம்.பி வில்சன் காட்டம் !
-
கஞ்சா போதையில் கும்பல் தாக்குதல்: நண்பனை காப்பாற்றச் சென்ற இளைஞர் படுகொலை - பதைபதைக்கும் தூத்துக்குடி!