India
“தன்னைப்போல் இல்லையென பிறந்த 2 மாத குழந்தையை கொன்ற தந்தை” : ஆந்திராவில் நடந்த கொடூரம்!
ஆந்திரா மாநிலம், கல்யாண துர்க்கம் பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜினா. இவரது மனை சிட்டம்மா. இந்த தம்பதிக்குப் பிறந்து இரண்டு மாதங்களான ஆன பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில், பிறந்த குழந்தை தன்னைபோலவும், உறவினர்கள் போலவும் இல்லை. எனவே உன்னுடைய நடத்தையில் சந்தேகம் இருக்கிறது என கூறி மனைவியிடம் மலிகார்ஜினா அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், தம்பதிகள் இருவரும் நேற்று குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது குழந்தை அழுததால் மல்லிகார்ஜினா குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே சென்றுள்ளார்.
பின்னர், நீண்ட நேரம் ஆகியும் கணவனும், குழந்தையும் வராததால் சந்தேகம் அடைந்த சிட்டம்மா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரை அடுத்து போலிஸார் அனந்தபூரில் தலைமறைவாக இருந்த மல்லிகார்ஜினவை கைது செய்தனர்.
அப்போது, குழந்தை குறித்து விசாரணை செய்தபோது தன்னுடைய சாயலில் குழந்தை இல்லாததால் குழந்தையின் வாயில் பிளாஸ்டரி ஒட்டி மூச்சுத்திணற செய்து கொலை செய்துவிட்டு, பிறகு பை ஒன்றில் குழந்தையை அடைத்து ஏரியில் வீசி விட்டேன் என கூறியதைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து ஏரிக்குச் சென்ற போலிஸார் குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மல்லிகார்ஜினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!