India
“இனி எந்த தப்பும் பண்ண மாட்டேன்” : கவுன்சிலிங் போது கதறி அழுத ஷாருக்கானின் மகன்: நடந்தது என்ன?
மும்பையில் சொகுசுக் கப்பலில் நடந்த போதை விருந்தில் கலந்து கொண்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட 17 பேரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஆர்யன்கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு அக்டோபர் 14ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கை அக்டோபர் 20ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையடுத்து சிறையில் இருக்கும் ஆர்யகன் உள்ளிட்ட 17 பேருக்கும் போதைப் பொருள் தடுப்பு மும்பை மண்டல இயக்குனர் சமீர் வாங்கடே மற்றும் சமூக ஆர்வலர்கள் கவுன்சிலிங்க கொடுத்தனர்.
அப்போது, “ஆர்யன்கான் தனது பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையில் இனி நடந்து கொள்ள மாட்டேன். இனி தவறான வழியில் செல்லமாட்டேன். சிறையிலிருந்து வெளியே சென்றதும் ஏழை மக்களுக்கு உதவுவேன்” என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பெற்றோருடன் வீடியோ காலில் பேச போலிஸார் ஆர்யன்கானுக்கு அனுமதி கொடுத்துள்ளனர். போனில் நடிகர் ஷாருக்கானுடன் பேசும் ஆர்யன்கான் கதறி அழுததாகச் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
”தேர்தல் ஆணையம் மீதே சந்தேகங்கள் அதிகம் இருக்கு” : முரசொலி தலையங்கம் சொல்வது என்ன?
-
"டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற நடராஜன் தகுதியானவர்"- ஜாம்பவான் வீரர் கருத்து !
-
கர்நாடகாவுக்கு 3498 கோடி, தமிழ்நாட்டுக்கு வெறும் 276 கோடி நிதி ஒதுக்கீடு - ஒன்றிய அரசை விமர்சித்த வைகோ !
-
பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் Fail : வெளிவந்த பாஜக ஆளும் ம.பி அரசுப் பள்ளியின் அவலம் !
-
பிரசார பாடலுக்கு தடை : ஆம் ஆத்மியை குறிவைக்கும் தேர்தல் ஆணையம் ? - குவியும் கண்டனம் !