India
பொது இடத்தில் சிறுநீர் கழித்த நபர்... தட்டிக் கேட்டவருக்கு நேர்ந்த கொடூரம் : மும்பையில் நடந்தது என்ன?
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வடலா பகுதியைச் சேர்ந்தவர் முகமது அன்சாரி. இவர் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி அப்பகுதியில் உள்ள பொது இருக்கையில் அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த முகமது ஷேக் என்ற வாலிபர் அவரது அருகே சிறுநீர் கழித்துள்ளார். இதைக் கண்ட அவர் ஏன் இப்படி பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த முகமது ஷேக் தான் வைத்திருந்த கத்தியால் முகமது அன்சாரியைச் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
காயமடைந்த முகமது அன்சாரியை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்து முகமது ஷேக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
உலகம் உங்கள் கையில் : மாணவர்களுக்காக 40 அரங்குகளுடன் தொழில்நுட்பக் கண்காட்சி தொடக்கம்.. எங்கு? - விவரம்!
-
விளையாட்டு பயிற்றுநர் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பயன்பாடு தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
சாத்தான் வேதம் ஓதும் அமித்ஷா; ஊழலைப் பற்றி என்ன அருகதை இருக்கிறது? : செல்வப்பெருந்தகை கண்டனம்!
-
ஐ.நா. பெண்கள் அமைப்புக்கும் - தமிழ்நாடு அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்... விவரம் என்ன?
-
வாயை கொடுத்து புண்ணாக்கிக் கொள்ளும் தமிழிசை.. அன்று பால்.. இன்று HCL.. கலாய்க்கும் இணையவாசிகள் - விவரம்!