India
பொது இடத்தில் சிறுநீர் கழித்த நபர்... தட்டிக் கேட்டவருக்கு நேர்ந்த கொடூரம் : மும்பையில் நடந்தது என்ன?
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வடலா பகுதியைச் சேர்ந்தவர் முகமது அன்சாரி. இவர் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி அப்பகுதியில் உள்ள பொது இருக்கையில் அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த முகமது ஷேக் என்ற வாலிபர் அவரது அருகே சிறுநீர் கழித்துள்ளார். இதைக் கண்ட அவர் ஏன் இப்படி பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த முகமது ஷேக் தான் வைத்திருந்த கத்தியால் முகமது அன்சாரியைச் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
காயமடைந்த முகமது அன்சாரியை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்து முகமது ஷேக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“இதுதான் உண்மையான சமநீதி - சமூகநீதி” : ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் குறித்து முரசொலி தலையங்கத்தில் புகழாரம்!
-
"இளைஞர் அஜித்குமார் விவகாரத்தில் சாத்தான் வேதம் ஓதும் பழனிசாமி" : ஆர்.எஸ். பாரதி பதிலடி!
-
திமுக சார்பில் அஜித்குமார் தாயாரிடம் ரூ.5 லட்சம் நிதி வழங்கிய அமைச்சர்: வீட்டுமனை பட்டா - பணி நியமன ஆணை!
-
”ChatGPT-யை முழுமையாக நம்ப வேண்டாம்” : பயனர்களுக்கு OpenAI தலைவர் சாம் ஆல்ட்மன் எச்சரிக்கை!
-
மாற்றுத்திறனாளிகள் மாமன்ற உறுப்பினர்களாக நியமனம் பெற விண்ணப்பிக்கலாம்! : முழு விவரம் உள்ளே!