India
பொது இடத்தில் சிறுநீர் கழித்த நபர்... தட்டிக் கேட்டவருக்கு நேர்ந்த கொடூரம் : மும்பையில் நடந்தது என்ன?
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வடலா பகுதியைச் சேர்ந்தவர் முகமது அன்சாரி. இவர் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி அப்பகுதியில் உள்ள பொது இருக்கையில் அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த முகமது ஷேக் என்ற வாலிபர் அவரது அருகே சிறுநீர் கழித்துள்ளார். இதைக் கண்ட அவர் ஏன் இப்படி பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த முகமது ஷேக் தான் வைத்திருந்த கத்தியால் முகமது அன்சாரியைச் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
காயமடைந்த முகமது அன்சாரியை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்து முகமது ஷேக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!