India
"நான்தான் புலி... நீதிமன்றத்தை பார்த்தெல்லாம் பயப்படாதீங்க" : திரிபுரா பா.ஜ.க முதல்வரின் சர்ச்சை பேச்சு!
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் கடந்த சனிக்கிழமையன்று சிவில் சர்வீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இதில் அம்மாநில முதல்வர் பிப்லப் குமார் தேப் கலந்துகொண்டார். அப்போது அவர் நீதிமன்ற அவமதிப்பு காரணமாக அதிகாரிகள் பணி செய்யத் தயங்குவதாகப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் பிப்லப் குமார் தேப் பேசுகையில், "நீதிமன்ற அவமதிப்பு அச்சம் காரணமாக அதிகாரிகள் சில பணிகளைச் செய்யத் தயங்குகிறார்கள். நீதிமன்றத்தைக் கண்டு அச்சம் எதற்கு?
நீதிமன்றம் தீர்ப்பை மட்டுமே வழங்கும். நீதிமன்றத்தின் உத்தரவை எனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை மூலம் நான்தான் செயல்படுத்துவேன். நீதிமன்றத்தைக் கண்டாலே அதிகாரிகள் புலியைப் போல் அஞ்சுகிறார்கள். ஆனால் நான்தான் புலி. எனவே அதிகாரிகள் நீதிமன்றத்தைக் கண்டு அஞ்சவேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.
திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேபின் இந்தப் பேச்சுக்கு வழக்கறிஞர்கள் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். மேலும் அரசியல் கட்சித் தலைவர்களும் இவரது பேச்சுக்கு எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளனர்.
Also Read
-
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய த.வெ.க அரசு : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
”முதல்வர் விஜயின் போலீஸ் ராஜ்யம்.. உத்திரபிரேதசத்தை நினைவுபடுத்தும் கோவை சம்பவம்” : முரசொலி தலையங்கம்!
-
“தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? 15 நாள்.. 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள்” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
”தவெக ஆட்சியில் குற்றவாளிகளின் கூடாரமாக தமிழ்நாடு.. வாய் திறப்பாரா முதல்வர் விஜய்?” : முரசொலி விமர்சனம்!
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!