India
"இனி மோடி மந்திரம் பலிக்காது": எடியூரப்பாவின் பேச்சால் பா.ஜ.கவில் சலசலப்பு!
கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சராக எடியூரப்பா இருந்த போது பதவி விலகச் சொல்லி பா.ஜ.க தலைமை அழுத்தம் கொடுத்தது. இதையடுத்து தனது முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா விலகினார். பின்னர் பசவராஜ் பொம்மையை புதிய முதலமைச்சராக பா.ஜ.க தலைமை தேர்வு செய்தது.
இந்நிலையில், இனி வரக்கூடிய தேர்தலில் வெற்றி பெற மோடியின் பெயர் மட்டும் போதாது என முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பேசியிருப்பது பா.ஜ.க வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தாலுக்கா தேர்தல், மேலவை உறுப்பினர்கள் தேர்தல் , இடைத்தேர்தல் உள்ளிட்ட தேர்தல்கள் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. மேலும் 2023ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க முனைப்புக் காட்டி வருகிறது.
இந்நிலையில் பா.ஜ.க செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று தேவனாகிரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் எடியூரப்பா, “கர்நாடக சட்டப்பேரவைக்கான கடந்த தேர்தலிலும் கூட நாம் நமது சேவைகளைச் சொல்லி வெற்றி பெற்றோம்.
மோடி அலையால் மட்டுமே வெற்றி பெற்றுவிடவில்லை என்பதை ஒவ்வொரு தொண்டர்களும் புரிந்து கொள்ள வேண்டும்” என பேசியுள்ளார். எடியூரப்பாவின் இந்த பேச்சால் பா.ஜ.க டெல்லி தலைமையிடம் அதிருப்தியடைந்துள்ளது.
Also Read
-
மாணவர்களின் கல்வி கனவை பறிப்பதா? - நீட் எதிர்ப்பு போராட்டத்தில் திமுகவினர் பங்கேற்பு: RS.பாரதி அறிக்கை!
-
“நீட் மறுதேர்வு நடத்தும் முடிவைக் கைவிடுக” : பிரதமர் மோடிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
அதிமுகவினருக்கு அமைச்சர் பதவி? - “தூய்மையான அரசியலுக்கு உகந்துதானா?” - விசிக MP ரவிக்குமார் கேள்வி!
-
மீண்டும் மீண்டும் மக்களை அவதிக்குள்ளாக்கும் த.வெ.க : வரவேற்பு கொண்டாட்டத்தால் போக்குவரத்து நெரிசல்!
-
“இன்று மகளிரின் நம்பிக்கையாக திகழும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” : முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!