India
"இனி மோடி மந்திரம் பலிக்காது": எடியூரப்பாவின் பேச்சால் பா.ஜ.கவில் சலசலப்பு!
கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சராக எடியூரப்பா இருந்த போது பதவி விலகச் சொல்லி பா.ஜ.க தலைமை அழுத்தம் கொடுத்தது. இதையடுத்து தனது முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா விலகினார். பின்னர் பசவராஜ் பொம்மையை புதிய முதலமைச்சராக பா.ஜ.க தலைமை தேர்வு செய்தது.
இந்நிலையில், இனி வரக்கூடிய தேர்தலில் வெற்றி பெற மோடியின் பெயர் மட்டும் போதாது என முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பேசியிருப்பது பா.ஜ.க வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தாலுக்கா தேர்தல், மேலவை உறுப்பினர்கள் தேர்தல் , இடைத்தேர்தல் உள்ளிட்ட தேர்தல்கள் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. மேலும் 2023ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க முனைப்புக் காட்டி வருகிறது.
இந்நிலையில் பா.ஜ.க செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று தேவனாகிரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் எடியூரப்பா, “கர்நாடக சட்டப்பேரவைக்கான கடந்த தேர்தலிலும் கூட நாம் நமது சேவைகளைச் சொல்லி வெற்றி பெற்றோம்.
மோடி அலையால் மட்டுமே வெற்றி பெற்றுவிடவில்லை என்பதை ஒவ்வொரு தொண்டர்களும் புரிந்து கொள்ள வேண்டும்” என பேசியுள்ளார். எடியூரப்பாவின் இந்த பேச்சால் பா.ஜ.க டெல்லி தலைமையிடம் அதிருப்தியடைந்துள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டு மக்களிடமிருந்து வசூலித்த நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு பாகுபாடு : பி.வில்சன் MP குற்றச்சாட்டு!
-
ரூ.80 ஆயிரம் கோடிக்கு எங்கே போவார்கள்? : அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை விமர்சித்த கி.வீரமணி!
-
“தேர்தல் பிரச்சாரத்திற்கு 48 மணிநேரம் முன்பே விண்ணப்பிக்க வேண்டும்!” : சென்னை தேர்தல் அதிகாரி விளக்கம்!
-
“பழனிசாமியிடம் உண்மையும் கிடையாது, உழைப்பும் கிடையாது, வெறும் பிழைப்புதான் உண்டு!” : முரசொலி தலையங்கம்!
-
திமுக கூட்டணியில் மேலும் 3 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு... என்னென்ன கட்சிகள்? எத்தனை தொகுதிகள்? - விவரம்!