India
வேலியே பயிரை மேய்வதா?: இளம் பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த கான்ஸ்டபிள்!
உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கங்கை நதியில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் சிலர் இதனைக் கண்டு அவரை உடனே மீட்டனர். பின்னர், அந்த பெண்ணிடம் தற்கொலை காரணம் குறித்து விசாரணை நடத்தியதில் அவர் கூறியதைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த பெண்ணின் மாமா உத்தர பிரதேச காவல்துறையில் கான்ஸ்டபிளாக உள்ளார். இவர் கடந்த 2019ம் ஆண்டு கும்பமேளாவில் கலந்துகொள்ள இந்த பெண்ணின் குடும்பத்தாரை அழைத்துள்ளார். இவர்களும் கும்பமேளாவைப் பார்க்க வந்துள்ளனர். அப்போது அவரது மாமா அந்த பெண்ணை விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.
இதை குடித்து மயக்கமடைந்த அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதை வீடியோ எடுத்து வைத்துள்ளார். இந்த வீடியோ காட்டி மிரட்டிக் கடந்த இரண்டு வருடங்களாகத் தொடர்ந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கங்கை நதியில் குதித்துள்ளார். அப்போதுதான் போலிஸார் அவரை மீட்டுள்ளனர். பின்னர் இளம் பெண் கூறியதைத் தொடர்ந்து அவரது மாமாவை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!