India
பெண் போலிஸ் முன்பு நிர்வாணமாக நின்ற கைதி: குஜராத் காவல்நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்!
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்திற்குட்பட்ட தலோதரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் நந்த்வானி. இவர் கடந்த வெள்ளியன்று பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டிருப்பதாக போலிஸாருக்கு புகார் வந்துள்ளது.
இதையடுத்து அங்கு சென்ற போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலிஸாரையும் தாக்க முற்பட்டுள்ளார். இதனால் போலிஸார் அவரை கைது செய்து சலபத்புரா காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், காவல்நிலையத்தில் இருந்த சிறையில் அவரை அடைத்தனர். அப்போது தொடர்ந்து சுரேஷ் கத்திக்கொண்டே இருந்துள்ளார். இதனால் கடுப்பான பெண் போலிஸ் ஒருவர், அமைதியாக இருக்குமாறு கூறியுள்ளார். அப்போது, திடீரென சுரேஷ் தனது ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாக நின்றுள்ளார். மேலும் காவல்நிலையத்திலிருந்த பெண் போலிஸாரை பார்த்து ஆபாசமாகத் திட்டியுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த சக போலிஸார் சிறைக்குள் நுழைந்து உடைமாற்றச் செய்தனர். பின்னர் பெண் போலிஸாரிடம் ஆபாசமாக நடந்துகொண்டதால் அவர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்குப்பதிவு செய்தனர்.
சுரேஷ் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தர பிரதேச மாநிலம் லக்கோனவில், பெண் போலிஸார் ஒருவரிடம் ஆபாசமாக நடந்துகொண்டது மட்டுமல்லாமல் அவரது தலையில் இரும்பு கம்பியால் அடித்துள்ளார். இதில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
175 இல்லை - 176 தொகுதிகளில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் களம் காணும் வேட்பாளர்கள்! : முழு விவரம் உள்ளே!
-
திருநெல்வேலி TO திருமங்கலம்... 33 தொகுதிகளில் முதலமைச்சரின் அடுத்த 3 நாள் பிரச்சாரம்... விவரம் உள்ளே!
-
“பாஜக கூட்டணியில், முழு சங்கியாகவே மாறியிருக்கிறார் பழனிசாமி!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
“கல்வித் துறையில் மாபெரும் பாய்ச்சலை உருவாக்கப் போகிற திராவிட மாடல் 2.O!” : முரசொலி தலையங்கம்!
-
ஒரே நாளில் 7 தொகுதிகளில் பிரச்சாரம் செய்து அசத்திய துணை முதலமைச்சர் உதயநிதி! : முழு விவரம் உள்ளே!