India
”ஏழே வருஷம்தான்.. மொத்தத்தையும் வித்துட்டாங்க” : மோடி அரசை சரமாரியாக தாக்கிய ராகுல் காந்தி!
இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் குத்தகைக்கு விட்டு ரூ.6 லட்சம் கோடி திரட்ட ஒன்றிய அரசு முடிவு செய்து இதற்கான பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் இந்த முடிவிற்குக் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 70 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு உருவாக்கியதை பா.ஜ.க அரசு 7 ஆண்டுகளிலேயே விற்றுவிட்டது என கடுமையாகச் சாடியுள்ளார். இந்தியத் தேசிய மாணவர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில்தான் இந்த கருத்தை ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில்," மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது மும்பை தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. அப்போது ஊடகங்கள் அவரை பலவீனமான பிரதமர் என விமர்சித்தன. ஆனால் புல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடிக்கு எதிராக எந்த ஊடகமும் கேள்வி எழுப்பவில்லை.
காங்கிரஸ் கட்சி கடந்த 70 ஆண்டுகளாக நாட்டுக்காக பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. இது அனைத்தையும் பாஜக அரசு கடந்த 7 ஆண்டுகளில் விற்றுவிட்டது. பாஜக தலைமையிலான அரசின் செயல்பாடுகள் குறித்து ஊடகங்கள் ஏதும் கேள்வி கேட்காமல் மவுனமாக இருக்கின்றன" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ஒருவேளை விஜய் வட இந்தியாவில் பிறந்திருந்தால்...” - கழக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தாக்கு!
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!