India
'செல்போன் கடைக்காரரை தீ வைத்து கொளுத்திய கணவன், மனைவி': தெலங்கானாவில் நடந்த பகீர் சம்பவத்தின் பின்னணி!
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜூ. இவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் அசோக் என்பவரிடம் ஏலச்சீட்டிற்கு பணம் கட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் ஏலச்சீட்டு தொடர்பாக இருவருக்கும் சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து நேற்று ராஜூவின் செல்போன் கடைக்கு அசோக் மற்றும் அவரது மனைவி சென்றுள்ளனர்.
அப்போது, மீண்டும் ஏலச்சீட்டு தொடர்பாக வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அசோக் திடீரென ராஜூ மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். இதில் உடல் முழுவதும் தீ பற்றிய நிலையிலேயே ராஜூ சாலையில் ஓடியுள்ளார். இதைப் பார்த்த பொதுமக்கள் தீயை அனைத்து அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.அங்கு ராஜூ தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்ற வருகிறார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாக இருக்கும் அசோக் மற்றும் அவரது மனைவியைத் தேடி வருகின்றனர். செல்போன் கடைக்காரர் மீது தீ வைத்து கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!