India
'செல்போன் கடைக்காரரை தீ வைத்து கொளுத்திய கணவன், மனைவி': தெலங்கானாவில் நடந்த பகீர் சம்பவத்தின் பின்னணி!
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜூ. இவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் அசோக் என்பவரிடம் ஏலச்சீட்டிற்கு பணம் கட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் ஏலச்சீட்டு தொடர்பாக இருவருக்கும் சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து நேற்று ராஜூவின் செல்போன் கடைக்கு அசோக் மற்றும் அவரது மனைவி சென்றுள்ளனர்.
அப்போது, மீண்டும் ஏலச்சீட்டு தொடர்பாக வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அசோக் திடீரென ராஜூ மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். இதில் உடல் முழுவதும் தீ பற்றிய நிலையிலேயே ராஜூ சாலையில் ஓடியுள்ளார். இதைப் பார்த்த பொதுமக்கள் தீயை அனைத்து அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.அங்கு ராஜூ தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்ற வருகிறார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாக இருக்கும் அசோக் மற்றும் அவரது மனைவியைத் தேடி வருகின்றனர். செல்போன் கடைக்காரர் மீது தீ வைத்து கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“கவர்ச்சியால் வெற்றிபெறாமல், வேறு எதைவைத்து வெற்றிபெற்றீர்கள்?” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பதிலடி!
-
“தமிழ்நாட்டில் என்னவானாலும் ‘விஜய்’ விளக்கமளிக்கப் போவதில்லை!” : கனிமொழி எம்.பி கண்டனம்!
-
டெல்லியில் நடைபெறும் ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் தி.மு.க பங்கேற்காது! : தலைமைக் கழகம் அறிவிப்பு!
-
தமிழ்நாட்டிற்கான 152 மருத்துவ இடங்களை கைவிட்டுவிடக்கூடாது! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தல்!
-
“திருச்சியில் கொடூரம்.. மது கொடுத்து சிறுமிக்கு கூட்டு பா*யல் வன்கொடுமை.. சாலையில் வீசிச் சென்ற அவலம்”