India
"இன்னிக்கு ராத்திரி உயிரோடு இருப்பேனானு தெரியல..." : இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்!
கேரளாவைச் சேர்ந்தவர் சுனிஷா. இவருக்கும் கண்ணூர் மாவட்டம் பையனூரை சேர்ந்த விஜீஷ் என்பவருக்கும் ஒரு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சுனிஷா அண்மையில் கணவர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார்.
இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, கணவர், மாமனார், மாமியார் என அனைவரும் சேர்ந்து சுனிஷாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் சுனிஷா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது சகோதரரிடம் பேசும் ஆடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் "உங்களால் முடிந்தால், தயவு செய்து இப்போதே வாருங்கள். நான் வரத் தயாராக இருக்கிறேன். எனது கணவரும் அவரது தாயாரும் என்னை அடித்துத் துன்புறுத்துகின்றனர். இன்றிரவு நான் உயிருடன் இருப்பேனா என்று தெரியவில்லை" என அதில் பேசியுள்ளார். தற்போது இந்த ஆடியோ கேரள ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் சமீபமாக வரதட்சணை கொடுமையால் விஷ்மயா, அர்ச்சனா, சுசித்ரா என இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது சுனிஷாவின் மரணம் கேரளத்தில் மீண்டும் வரதட்சணை கொடுமை குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்துள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!