India
தொடர்ந்து பீட்சா ஆர்டர் செய்து பெண்ணுக்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது : பெங்களூருவில் நடந்தது என்ன?
பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஃபேஸ்புக் மூலம் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மனீஷ்குமார் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
இதையடுத்து மனீஷ்குமார், அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். இதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஃபேஸ்புக்கில் இருந்து அவரை ப்ளாக் செய்துள்ளார்.
இருந்தபோதும், அந்தப்பெண்ணின் நண்பர்களுக்கு ஃபேஸ்புக் மூலம் மனீஷ்குமார் தவறான செய்திகளை அனுப்பி வந்துள்ளார். அதையடுத்து மனீஷ்குமார் அந்தப் பெண்ணின் செல்போன் எண்ணைத் தெரிந்துகொண்டு அவருக்குத் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வந்துள்ளார்.
மேலும் மனீஷ்குமார் அந்தப் பெண் எங்கு இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு தினமும் அவரது பெயரில் ஐந்து பீட்சா ஆர்டர் செய்து அவருக்குக் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் இப்படி ஆர்டர் செய்யப்படும் பீட்சாக்கள் ‘கேஷ் ஆன் டெலிவரி’ முறையில் ஆர்டர் செய்யப்படுவதால் அந்த பெண்ணே பணம் கொடுக்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அந்தப் பெண் பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இவரது புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து மனீஷ்குமாரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
தீபாவளி பண்டிகை : சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் - கிளாம்பாக்கத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்!