India
பலே திருடன்... கொள்ளையை காட்டிக் கொடுத்த X-ray: அதிர்ச்சியடைந்த பெங்களூரு போலிஸ்!
பெங்களூரு சிட்டி மார்க்கெட்டின் எம்.டி பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா. இவர் சம்பவத்தன்று இரவு கடை ஒன்றில் பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த மூன்று நபர்கள் திடீரென ஹேமா கழுத்திலிருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு ஓடினர். இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் அவர்களைப் பிடிக்க முயன்றனர்.
இதில் மூன்று பேரில் ஒருவர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கார். அவரிடம் செயின் இருக்கிறதா என மக்கள் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ஆனால் செயின் இல்லை. பின்னர் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பின்னர் அங்கு வந்த போலிஸார், திருடனை பொதுமக்களிடமிருந்து மீட்டனர். பொதுமக்கள் தாக்கியதில் திருடனுக்கு காயம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது திருடனின் வயிற்றில் தங்கச் செயின் இருந்ததைப் பார்த்து போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து மருத்துவர்கள், திருடனின் வயிற்றிலிருந்த செயினை எடுப்பதற்காக அவருக்கு எனிமா கொடுத்து வெளியே எடுத்தனர். பின்னர் அவரை போலிஸார் கைது செய்து விசாரணை செய்தபோது, திருடன் பெயர் விஜய் என்பது தெரியவந்தது. மேலும் தப்பியோடிய மற்ற இருவரை போலிஸார் தேடி வருகின்றனர்.
Also Read
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”
-
”இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை.. ஐ.நா.வின் கணிப்பு.. பொய் கூறுகிறாரா பிரதமர்?” - முரசொலி தலையங்கம்!
-
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
-
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!
-
“ஆதவ் அர்ஜுனா அரசியலில் ஒரு கள்ள நாணயம்” : ஆர்.எஸ்.பாரதி சாடல்!