India
ப்ளூடூத் ஹெட்போன் வெடித்து சிறுவன் பலி : ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம், உதய்புரியா கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் நகர். சிறுவனான ராகேஷ் ப்ளூடூத் ஹெட்போன் பயன்படுத்தி தனது நண்பனிடம் சொல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது, திடீரென ஹெட்போன் வெடித்துச் சிதறியுள்ளது. இதில் சிறுவன் ராகேஷ் மயங்கி கீழே விழுந்துள்ளார். மேலும் அவரது இரண்டு காதுகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்ததாகவும், இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.
ப்ளூடூத் ஹெட்போன் வெடித்து சிறுவன் உயிரிழப்பது நாட்டிலேயே இது முதல் முறையாகும். ஹெட்போன் வெடித்தபோது மயங்கி விழுந்ததில் சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களிடம் ப்ளூடூத் ஹெட்போன் பயன்பாடு அதிகமாக உள்ளது. இந்நிலையில் சிறுவனின் உயிரிழப்பு ப்ளூடூத் ஹெட்போன் காரணமாகி இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பாஜகவிடம் அடிமையாக அதிமுக இருப்பதற்கான காரணம் இதுதான்...” - தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. பேச்சு!
-
பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைக்கும் ‘அன்புக்கரங்கள்’ திட்டம் - புதிய திட்டத்தின் சிறப்பு என்ன?
-
“இது என்ன, வாக்கரசியலுக்காக செய்வதா?” : ‘அன்புக்கரங்கள்’ திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் பதிலடி!
-
“IPL போல அதிமுகவில் APL போட்டி நடத்தலாம்” - அதிமுகவின் பல அணிகளை குறிப்பிட்டு துணை முதலமைச்சர் கிண்டல்!
-
“விஸ்வகுரு, விசுவாசம் இல்லாத குருவாகக் காட்டிக் கொண்டுவிட்டார்” - மோடியை விமர்சித்த முரசொலி தலையங்கம்!