India
சுத்திகரிப்பு ஆலையின் குழாயில் துளையிட்டு பெட்ரோல், டீசல் திருட்டு - போலிஸிடம் சிக்கிய நில உரிமையாளர்!
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே மங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையிலிருந்து ஹாசன் வழியாக பெங்களூருக்கு குழாய் மூலம் பெட்ரோலிய பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்த குழாய் வழியே பெட்ரோலியம் மங்களூருவிலிருந்து அனுப்பும் அளவில் இருந்து, சேரும் இடத்தில் குறைவாக இருந்தது தொடர்ந்து வந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் பைப்லையன் செல்லும் இடங்களில் முழுமையாக எங்காவது கசிவு எற்ப்பட்டிருக்கிறதா என சோதனையிட்டனர்.
அப்போது பண்டுவால் தலுகா அரலா கிராமத்தில் ஐவான் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் பெட்ரோலியம் லீக் ஆகி இருந்தது தெரியவந்தது. அந்த இடத்தை பறித்து சோதனையிட்டபோது, அங்கு பெட்ரோல் பைப் லைனில் 1.5 இஞ்ச் அளவுக்கு பைப் லையணில் துளையிட்டு நீளமாக பைப் பொருத்தி 3 வால்வுகள் அமைத்து பெட்ரோல் டீசலை திருடிய விவரம் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பண்டுவால் புறநகர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து அந்த நிலத்தின் உரிமையாளர் ஐவான் மற்றும் அவருக்கு உடந்தையாக ராஜன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இது குறித்து போலிஸார் மேலும் விசாரணை நடத்திவருகின்றனர்.
Also Read
-
”இடஒதுக்கீடு கொள்கையின் பிதாமகன் தமிழ்நாடு” : சட்டப்பேரவையில் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
”இன்ஸ்டா ரீல்ஸ் அரசியல் செய்யும் பழனிசாமி” : அமைச்சர் சிவசங்கர் பதிலடி!
-
தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன்? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
BLINKIT வணிக தளத்தில் ‘கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகள்!’ : முழு விவரம் உள்ளே!
-
இரட்டை இலக்கை எட்டிய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமை!