India
ATM கொள்ளை.. இருவர் கைது.. “30 பேர் சேர்ந்து கொள்ளையடிப்போம்” - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
தமிழ்நாடு முழுவதும் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் மையங்களை குறிவைத்து நூதன முறையில் ரூபாய் ஒரு கோடி வரை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து எஸ்.பி.ஐ வங்கி மேலாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து, வங்கி கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர். இதில் சென்னையில் மட்டும் 15 வங்கி ஏ.டி.எம்-களில் 50 லட்சம் ரூவாய் வரை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து சென்னை போலிஸார் ஹரியானா சென்று விசாரணை நடத்தினர். அப்போது, முக்கிய குற்றவாளி அமீர் என்பவனை கைது செய்தனர்.
இதையடுத்து போலிஸார் அமீரிடம் நடத்திய விசாரணையில், ஆறு இடங்களில் நண்பர் வீரேந்தருடன் சேர்ந்து வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாகவும், கொள்ளையடித்த பணத்தை ஒரு வங்கி கணக்கில் செலுத்தியதாகவும், அமீர் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மற்றொரு குற்றவாளியான வீரேந்தரை போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகியுள்ளன.
அதாவது, ஹரியானா மாநிலம், மேவாட் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு கொள்ளை கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இரண்டு கொள்ளை கூட்டங்களில் 30 பேர் வரை இணைந்து ஏ.எடி.எம் வங்கி கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவர்கள் 50 லட்சத்திற்கு மேல் பணம் கொள்ளையடித்தால், நான்கு சக்கர வாகனத்தின் மூலம் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுவிடுவார்கள். அல்லது கொள்ளையடித்த பணத்தை குருவிகளிடம் கொடுத்துவிட்டு விமானங்கள் மூலம் தப்பிச் செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதையும் தமிழ்நாட்டு போலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
Also Read
-
சூடுபிடிக்கும் தேர்தல் களம்! : தி.மு.க சார்பில் போட்டியிட 15,372 விருப்ப மனுக்கள் தாக்கல்!
-
“நான் முதல்வனின் அடுத்த version-ல் சர்வதேச அளவிலான சாதனைதான்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
UPSC முடிவுகள் வெளியானது! - ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் 56 பேர் தேர்ச்சி பெற்று அசத்தல்!
-
டி20 உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்தியா…பும்ரா குறித்து சஞ்சு சாம்சன் சொன்ன அந்த வார்த்தை!
-
“‘பட்டா’ என்ற பல ஆண்டு கனவை நம்முடைய அரசு இன்றைக்கு நனவாக்கி இருக்கிறது!” - துணை முதலமைச்சர் உதயநிதி உரை!