India
இயற்பியல், கணிதம் படிக்காதவர்களுக்கு பொறியியல் சீட்? கல்வி தரத்தை குறைக்க திட்டமிடும் ஒன்றிய பாஜக அரசு?
+2 பாடதிட்டத்தில் இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களை எடுத்துப்படித்திருக்க வேண்டும் என்பது பொறியல் படிப்பில் சேருவதற்கான அடிப்படை தகுதியாக இருந்து வருகிறது. இதனை மாற்ற ஒன்றிய அரசு கடந்த 11 ஆம் தேதி ஆலோசனை நடத்தியுள்ளது.
நிதி ஆயோக் தலைவர் ராஜிவ்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அகில இந்திய தொழில்நுட்ப குழு தலைவர், நிதி ஆயோக், கல்வி துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
ஒன்றிய அரசின் புதிய திட்டத்துக்கு கூட்டத்தில் நிதி ஆயோக் உறுப்பினரும், அறிவியலாளருமான வி.கே.சரஸ்வத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்திய பொறியியல் கல்வியின் தரத்தை இது குறைத்துவிடும் என்று எச்சரித்துள்ளார். ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்த அகில இந்திய தொழில்நுட்ப குழு தீவிரமாக ஆலோசித்துவருவதாக கூறப்படுகிறது.
இதற்கு கல்வியாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது காலியாகக் கிடக்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளை நிரப்பும் முயற்சி. பொறியியல் கல்வியின் தரத்தை இது பாதிக்கும் என்று எச்சரித்துள்ளனர்.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!