India
இயற்பியல், கணிதம் படிக்காதவர்களுக்கு பொறியியல் சீட்? கல்வி தரத்தை குறைக்க திட்டமிடும் ஒன்றிய பாஜக அரசு?
+2 பாடதிட்டத்தில் இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களை எடுத்துப்படித்திருக்க வேண்டும் என்பது பொறியல் படிப்பில் சேருவதற்கான அடிப்படை தகுதியாக இருந்து வருகிறது. இதனை மாற்ற ஒன்றிய அரசு கடந்த 11 ஆம் தேதி ஆலோசனை நடத்தியுள்ளது.
நிதி ஆயோக் தலைவர் ராஜிவ்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அகில இந்திய தொழில்நுட்ப குழு தலைவர், நிதி ஆயோக், கல்வி துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
ஒன்றிய அரசின் புதிய திட்டத்துக்கு கூட்டத்தில் நிதி ஆயோக் உறுப்பினரும், அறிவியலாளருமான வி.கே.சரஸ்வத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்திய பொறியியல் கல்வியின் தரத்தை இது குறைத்துவிடும் என்று எச்சரித்துள்ளார். ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்த அகில இந்திய தொழில்நுட்ப குழு தீவிரமாக ஆலோசித்துவருவதாக கூறப்படுகிறது.
இதற்கு கல்வியாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது காலியாகக் கிடக்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளை நிரப்பும் முயற்சி. பொறியியல் கல்வியின் தரத்தை இது பாதிக்கும் என்று எச்சரித்துள்ளனர்.
Also Read
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
-
கரூர் விவகாரம் “நாங்க வழக்குப் போடல” - நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக: பாதிக்கப்பட்டவர்கள் புகாரால் ட்விஸ்ட்