India
காதலை ஏற்காததால் இளம்பெண் கழுத்தறுத்து கொலை... கொலையாளியை சுற்றிவளைத்துத் தாக்கிய கிராம மக்கள்!
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் சித்தலசெருவு கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீஷா. கல்லூரி மாணவியான இவரை, அதே பகுதியைச் சேர்ந்த சரண் என்பவர் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார்.
பின்னர் சரண், ஸ்ரீஷாவிடம் காதலைத் தெரிவித்துள்ளார். அப்போது அவரின் காதலை ஸ்ரீஷா ஏற்க மறுத்ததால், ஆத்திரமடைந்த சரண் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்ரீஷாவின் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார்.
இதைப்பார்த்த கிராம மக்கள் சரணை பிடித்து சரமாரியாகத் தாக்கினர். பின்னர் இது பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸாரிடம் கிராம மக்கள் சரணை ஒப்படைத்தனர்.
பின்னர், ஸ்ரீஷாவின் உடலை மீட்ட போலிஸார் பிரேதப் பரிசோதனைக்கான மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு கிராம மக்கள் தாக்கியதில் காயமடைந்த சரண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலிஸார் சேர்த்துள்ளனர். மேலும், சரண் மீது கொலை வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“ஒருவேளை விஜய் வட இந்தியாவில் பிறந்திருந்தால்...” - கழக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தாக்கு!
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!