India
காதலை ஏற்காததால் இளம்பெண் கழுத்தறுத்து கொலை... கொலையாளியை சுற்றிவளைத்துத் தாக்கிய கிராம மக்கள்!
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் சித்தலசெருவு கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீஷா. கல்லூரி மாணவியான இவரை, அதே பகுதியைச் சேர்ந்த சரண் என்பவர் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார்.
பின்னர் சரண், ஸ்ரீஷாவிடம் காதலைத் தெரிவித்துள்ளார். அப்போது அவரின் காதலை ஸ்ரீஷா ஏற்க மறுத்ததால், ஆத்திரமடைந்த சரண் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்ரீஷாவின் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார்.
இதைப்பார்த்த கிராம மக்கள் சரணை பிடித்து சரமாரியாகத் தாக்கினர். பின்னர் இது பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸாரிடம் கிராம மக்கள் சரணை ஒப்படைத்தனர்.
பின்னர், ஸ்ரீஷாவின் உடலை மீட்ட போலிஸார் பிரேதப் பரிசோதனைக்கான மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு கிராம மக்கள் தாக்கியதில் காயமடைந்த சரண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலிஸார் சேர்த்துள்ளனர். மேலும், சரண் மீது கொலை வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
தமிழ்நாடு விளையாட்டு துறையின் சாதனைகள் : முழு பட்டியல் இதோ!
-
விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! : எங்கு? எப்போது?
-
“கழக அரசுக்கும், மீனவர்களுக்குமான உறவு கடலைப் போலவே ஆழமானது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி 4 தொழிலாளர் விரோத சட்டங்கள் அமல் : ஒன்றிய பா.ஜ.க அரசின் அராஜகம்!
-
”விவசாயிகளின் கண்ணீரை பற்றி கவலைப்படாத பிரதமர் மோடி” : செல்வப்பெருந்தகை ஆவேசம்!