India
60 நாட்களுக்குப் பிறகு கணிசமாகக் குறைந்த கொரோனா தொற்று: இன்று புதிதாக 1.14 லட்சம் பேர் பாதிப்பு!
இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் 60 நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்றின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,14,460 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 1,89,232 பேர் கொரானா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
அதேபோல், கொரோனா தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் சற்று குறைந்துள்ளது. கடந்த 60 நாட்களுக்கு முன்பு 4 ஆயிரத்திற்கு மேல் பதிவான எண்ணிக்கை, சற்று குறைந்து ௨,677 ஆக உயிரிழப்போர் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதன் மூலம் 3,46,769 பேர் நாடு முழுவதும் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கடந்த 10 நாட்களாக 2 லட்சத்திற்குக் கீழ் தொற்று பதிவாகி வருகிறது. இருந்தபோதும், உயிரிழப்பு எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்தால் மட்டுமே, இரண்டாவது அலை கட்டுக்குள் வந்துள்ளது என கூற முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Also Read
-
மின்துறை வெள்ளை அறிக்கை : உண்மையை திட்டமிட்டே மறைத்த த.வெ.க அமைச்சர்... அம்பலப்படுத்திய செந்தில் பாலாஜி!
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
கொலை நகரான தலைநகரம் : சென்னை தியாகராயநகரில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்!
-
கோவையில் அத்துமீறல்: காவல் நிலையத்தையும் விட்டுவைக்காத த.வெ.க.வினரின் விளம்பர மோகம்!