India
விதியை மீறியதாகச் சொல்லி போலிஸார் தாக்கியதில் சிறுவன் பலி; உ.பியில் நடந்த ‘லாக்கப் டெத்’ !
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதை அடுத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உத்தர பிரதேச மாநிலத்திலும் ஊரடங்கு விதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த சிறுவன் முகமது ஃபைசல். இந்த சிறுவன் தனது வீட்டின் முன்பாக காய்கறி விற்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று போலிஸார் விஜய் சௌத்ரி, சத்ய பிரகாஷ் ஆகிய இருவர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது வீட்டின் முன்பு முகமது ஃபைசல் காய்கறிகளை விற்றுக் கொண்டிருந்தார். ஊரடங்கு வீதிகளை மீறியதாகக் கூறி சிறுவனை போலிஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்று கொடூரமாக அடித்துள்ளனர்.
இதில் காயமடைந்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்த சிறுவனின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு போலிஸாரையும் உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
Also Read
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !