India
மோடி ஆட்சியில் தொடரும் பொருளாதார வீழ்ச்சி.. கொரோனா காலத்திலும் 66.5 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய அதானி!
கொரோனான வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டது. இந்த சரிவிலிருந்து இன்னும் மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றால், பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் லட்சம் பேர் வேலை இழந்து வீதிக்கு வந்துள்ளனர்.
ஆனால், இதை பற்றி எல்லாம் கவலைப்படாத மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ரயில்வே, விமான நிலையம், ராணுவத் தளவாடங்கள் என பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று வருகிறது.
இந்நிலையில், மோடி அரசு இரண்டு நபர்களின் செல்வங்களை வளர்க்கவே ஆட்சியைச் செய்கிறது. இது மக்களுக்கான ஆட்சி கிடையாது. பணக்காரர்களுக்கான ஆட்சி என எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்கள் செய்து வந்தனர்.
இந்த விமர்சனங்களை, உண்மையாக்கும் விதமாக புளூம்பெர்க் நிறுவனம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, உலக அளவில் அம்பானிக்கு அடுத்தபடியாக 14-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
உலகப் பெரும்பணக்காரர்களின் பட்டியலை, புளூம்பெர்க் நிறுவனம் (Bloomberg Billionaires Index) வெளியிட்டுள்ளது. இதில், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ தலைவர் முகேஷ் அம்பானி வழக்கம்போல், இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக வந்துள்ளார். மேலும் உலக அளவில் 13வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, உலக அளவில் அம்பானிக்கு அடுத்தபடியாக 14வது இடத்தைப் பிடித்துள்ளார். அத்துடன், ஆசியாவின் 2வது பெரும் பணக்காரராக இருந்து வந்த சீனாவின் ஸாங் ஷான்ஷானை பின்னுக்குத் தள்ளிவிட்டு, அந்த இடத்திற்கு முன்னேறியுள்ளார் அதானி.
கடந்த பிப்ரவரி மாதம் வரை சீனாவின் ஸாங் ஷான்ஷான்தான் ஆசிய அளவில் முதற்பெரும் பணக்காரராக இருந்தார். அவரை இரண்டாம் இடத்துக்குத் தள்ளி முகேஷ் அம்பானி முதல் இடத்துக்கு முன்னேறினார். ஷான்ஷான் இரண்டாம் இடத்தில் இருந்து வந்தார். தற்போது, அவரை இரண்டாம் இடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்கு அதானி தள்ளியுள்ளார்.
அம்பானியின் சொத்து மதிப்பு 76.5 பில்லியன் டாலர்களாக உள்ள நிலையில், அதானியின் சொத்து மதிப்பு மிகக் குறுகிய காலத்தில் 66.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அதாவது, அதானியின் சொத்து மதிப்பு - கடந்த ஒரே ஆண்டில் மட்டும் - அதுவும் கொரோனா பாதிப்புகளுக்கு இடையே சுமார் 32.7 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.
2020ம் ஆண்டிலிருந்து கொரோனா தாக்கத்தால் இந்தியாவின் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்துள்ள நிலையில், அதானியின் சொத்து மதிப்பு மட்டும் எப்படி அதிகரித்துள்ளது என்ற சந்தேகத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!