India
யோகியின் மாவட்டத்தில் 46,000 பேர் பாதிப்பு.. பெருந்துயரை வேடிக்கை பார்க்கிறது பாஜக அரசு: அகிலேஷ் தாக்கு!
கொரோனா பெருந்தொற்றால் உத்தர பிரதேச மாநிலம் மிக மோசகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதி கிடைக்காமல் மக்கள் வீதிகளில் அலைந்து கொண்டிருக்கின்றனர்.
கொரோனா தொற்றால் தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சடலங்களை எரிப்பதற்கான இடம் கிடைக்காமல், கங்கை நதியில் வீசுவதாகவும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவலையும், உயிரிழப்பை பற்றிக் கண்டு கொள்ளாமலும், சேதத்தை அறியாமலும் பா.ஜ.க அரசு மவுனமாக வேடிக்கை பார்ப்பதாக சமாஜ்வாதிக் கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “உத்தர பிரதேச மாநிலங்களில் உள்ள கிராமங்களில் கொரோனா உயிரிழப்பு நாளுக்கு அதிகரித்து வருகிறது.
ஆனால், தொற்றைத் தடுப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சர்களைக் காணவில்லை. மாநிலத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்திவிட்டோம் என்று முதல்வர் ஆதித்யநாத் பொய் கூறி வருகிறார்.
ஆதித்யநாத்தின் சொந்த மாவட்டமான கோரக்பூரில் 46 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காய்ச்சல், இருமலுடன் அலைகிறார்கள். ஆனால், மாவட்ட நிர்வாகமோ 764 பேர் தான் பாதிக்கப்பட்டார்கள் எனக் கூறுகிறது.
கிராமங்களில் வேகமாக கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், அதைச் சமாளிக்க போதுமான மருந்துகள், பரிசோதனை வசதிகள், தடுப்பூசிகளை மக்களுக்காக ஏற்பாடு செய்யாமல், அங்கு நடக்கும் பெருந்துயரை மவுனமாக பா.ஜ.க அரசு வேடிக்கை பார்க்கிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !