India
பாஜக ஆளும் மாநிலங்களில் தொடரும் மரண ஓலம்: கோவாவில் நான்கே நாட்களில் 74 பேர் பலியான அவலம்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஆக்சிஜன் பற்றாக்குறையால், உத்தர பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரகண்ட், டெல்லி, கர்நாடகா, கோவா போன்ற மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் பா.ஜ.க ஆளும் கோவா மாநிலத்தில் நான்கு நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 74 கொரோனா நோயாளிகள் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த செவ்வாய்கிழமையன்று ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 26 பேர் உயிரிழந்தனர். பின்னர் புதனன்று 20 பேரும், விழானன்று 15 பேரும், இன்று 13 பேரும் அடுத்தடுத்த நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால், அதுவும் ஒரே மருத்துவமனையில் உயிரிழந்திருப்பது அம்மாநில மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாயன்று மருத்துவமனையை ஆய்வு செய்த கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த், மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றும், ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக உயிரிழப்புகள் நடந்திருக்கலாம் என தெரிவித்திருந்தார்.
ஆனால், ஒரே மருத்துவமனையில் அடுத்தடுத்த நாட்கள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்திருப்பது, கோவா மாநிலத்தில் கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதையே காட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், கோவா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தற்போது கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. அங்கு படுக்கைகள் இல்லாததால் வராண்டாவிலும், ஸ்டோர் ரூம்களிலும் புதிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Also Read
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!