India
கொத்து கொத்தாக மடியும் மக்கள்; மூட நம்பிக்கையை வளர்க்கும் பாஜக - சர்ச்சையை கிளப்பிய ம.பி. பெண் அமைச்சர்!
கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் இந்தியா பேரழிவைச் சந்தித்து வருகிறது. இதுவரை 2,33,40,938 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,54,197 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இன்னும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராமல் அதன் கோரதாண்டவத்தை காட்டி வருகிறது.
இப்படி நாடே இக்கட்டான நிலையில் இருக்கும் போது, கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ளக் கோமியம் குடியுங்கள், மாட்டுச் சாண குளியல் எடுங்கள், யாகம் நடத்துங்கள் என அறிவியலுக்குப் புறம்பாக பா.ஜ.க தலைவர்கள் பேசி வருகின்றனர்.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தே சுகாதார வசதிகளை மேம்படுத்தாமல், கொரோனா ஒழிய வேண்டும் என யாகம் நடத்திக் கொண்டிருக்கிறார். தற்போது மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க அமைச்சரும் கொரோனா மூன்றாவது அலை வராமல் இருக்க யாகம் நடத்துங்கள் என பேசியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் ஆம்புலன்ஸ், ஆக்சிஜன் வசதி கிடைக்காமல் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்தூரில் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ மையத்தை அமைச்சர் உஷா தாக்கூர் திறந்து வைத்து பேசுகையில், "கொரோனா வைரஸ் மூன்றாவது அலை வராமல் இருக்க யாகங்களை 4 நாட்களுக்கு நடத்துங்கள். இது யக்ஞ சிகிச்சை ஆகும். ஆதி காலங்களில் நம் மூதாதையர்கள் பெருந்தொற்றுக்களை ஒழிக்க யாகங்களை நடத்தினர்." என பேசியுள்ளார்.
முன்னதாக இந்தூர் விமான நிலையத்தில் உள்ள சிலைக்கு முன்பு உஷா தாக்கூர் சடங்குகள் நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சமீபத்தில் கொரோனா சிகிச்சை மையத்துக்கு இவர் முகக்கவசம் அணியாமல் சென்றது சமூக ஊடகங்களில் பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தியதும் கூடுதல் தகவல்.
Also Read
-
NDA-க்கு எதிராக முழங்கிய தமிழ்நாடு! : மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! : தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!
-
“மக்களுக்காக மேலும் உழைக்க காத்திருக்கிறோம்!” : திருப்பத்தூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!