India
கொரோனாவால் செத்து மடியும் நாட்டு மக்கள்.. பெட்ரோல் விலையை தினந்தோறும் உயர்த்தி குளிர்காயும் மோடி அரசு !
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் மக்கள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு , 5 மாநில தேர்தல் முடிந்ததும், மத்திய அரசு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகிறது.
நேற்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.93.62 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.87.25 காசுகளுக்கும் விற்கப்பட்டது. இன்று 22 காசுகள் உயர்த்தப்பட்டு, பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.93.84 காசுகளுக்கும், டீசல் 24 காசுகள் உயர்ந்து ரூ.87.49 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.
இதையடுத்து, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. மகாராஷ்டிராவில் பெட்ரோல் விலை ரூ.100.20க்கும், ராஜஸ்தானில் ரூ.102.42க்கும் விற்கப்படுகிறது. அதேபோல் மத்தியப் பிரதேசத்தில் பெட்ரோல் விலை ரூ.102.12க்கும் விற்கப்படுகிறது. மோடி அரசின் இத்தகைய கொடூர நடவடிக்கை சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“எடப்பாடி பழனிசாமியின் மாணவர் விரோத மனநிலை!” : வீரபாண்டியன் கண்டனம்!
-
“இலங்கையின் கைப்பிடியில் 61 மீனவர்கள், 248 மீன்பிடிப் படகுகள்!” : ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
கோவையில் ‘சி. சுப்பிரமணியம்’ பெயரில் உயர்மட்ட மேம்பாலம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள்.. தமிழ்நாடு அரசு புதிய சாதனை-விவரம்!
-
திருமணம் ஆகாத இளைஞர்களே குறி... 19 வயதில் 8 ஆண்களை ஏமாற்றிய ஆந்திராவின் கல்யாண ரா(வா)ணி!