India
மோடி ஆட்சியில் தொடரும் பொருளாதார வீழ்ச்சி.. ஆனால், கொரோனா காலத்திலும் 41,926 கோடி வருவாய் ஈட்டிய அம்பானி!
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அமைத்ததில் இருந்து முதலாளிக்கு ஆதரவாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு வகையில் சாதகமாகச் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, கொரோனா காலத்தில் வறுமையில் தவித்த மக்களுக்கு உதவி செய்ய முன்வராத இந்த மோடி அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வரிச் சலுகையை அறிவித்தது.
இந்நிலையில் மோடி ஆட்சியில், இந்தியாவைப் பார்க்கும்போது தனியார் நிறுவனத்தின் தொழில்முனைவோர்களுக்கு சுனாமி போல ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என முகேஷ் அம்பானி முன்பே தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தற்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் ரூ.13,277 கோடி லாபம் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. கொரோனா காலத்திலும், ஆசியாவின் நம்பர்-1 பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் மின்னல் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
குறிப்பாக இந்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்த 3ஆம் காலாண்டில் ரூ.13,101 கோடி லாபம் ஈட்டியது. அதேபோல் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த கடைசி காலாண்டிலும் முன்பைவிட சுமார் ரூ.13,277 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ஈட்டிய லாபத்தை விட 108 சதவீதம் அதிகமாகும்.
அதுமட்டுமல்லாது, முகேஷ் அம்பானிக்கு எண்ணெய் - கெமிக்கல்ஸ் வணிகத்தின் வருவாய் 4.4% அதிகரித்து, ரூ.1.01 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், சில்லறை வணிக வருவாய் ரூ.41,926 கோடியாக அதிகரித்துள்ளது. நாடே பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் போது மோடியின் நண்பரான முகேஷ் அம்பானிக்கு சொத்து மதிப்பு மட்டும் எப்படி உயர்ந்தது என கேள்வி எழுந்துள்ளது.
Also Read
-
திருவள்ளூர் அம்மோனியா வாயுக் கசிவு : 2 பேர் பலி... 50-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை - விவரம்!
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!