India
தீதியிடம் பணிந்த மோடி, அமித்ஷா... 202 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை!
மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களான சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.கவுக்கும் இடையே கடும்போட்டி நிலவிவருகிறது.
மேற்குவங்க மாநிலத்தில் ஆட்சி அமைக்க 148 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போதைய நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 202 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. இத்தகவல் அடிப்படையில் பார்த்தால் மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரப்போகிறார்.
தற்போது வெளியான தேர்தல் முடிவுகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 202 இடங்களிலும், பாஜக 77 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. இதனால் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் அறுதிப் பெரும்பான்மையை பெற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.
மேற்கு வங்கத்தை எப்படியேனும் கைப்பற்றிட பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா பல வியூகங்களை மேற்கொண்டனர். மேலும் தீவிரமான பரப்புரையும் செய்தனார். ஆனால் பா.ஜ.கவின் வியூகத்தை எல்லாம் மம்தா பானர்ஜி தவிடுபொடியாக்கியுள்ளார் என்பதையே தற்போதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளது.
Also Read
-
“இது நூல் அல்ல, நமது போர் ஆயுதம்”: ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கி.வீரமணி உரை!
-
“நமது ஆட்சியின் Diary ; எதிரிகளுக்கு பதில் சொல்லும் நூல்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் : ஜன.14 ஆம் தேதி தொடங்கிறது சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா
-
சென்னை மெட்ரோ ரயில் Phase II : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
வேளாங்கண்ணி TO இலங்கை... ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!