India
தீதியிடம் பணிந்த மோடி, அமித்ஷா... 202 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை!
மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களான சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.கவுக்கும் இடையே கடும்போட்டி நிலவிவருகிறது.
மேற்குவங்க மாநிலத்தில் ஆட்சி அமைக்க 148 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போதைய நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 202 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. இத்தகவல் அடிப்படையில் பார்த்தால் மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரப்போகிறார்.
தற்போது வெளியான தேர்தல் முடிவுகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 202 இடங்களிலும், பாஜக 77 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. இதனால் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் அறுதிப் பெரும்பான்மையை பெற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.
மேற்கு வங்கத்தை எப்படியேனும் கைப்பற்றிட பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா பல வியூகங்களை மேற்கொண்டனர். மேலும் தீவிரமான பரப்புரையும் செய்தனார். ஆனால் பா.ஜ.கவின் வியூகத்தை எல்லாம் மம்தா பானர்ஜி தவிடுபொடியாக்கியுள்ளார் என்பதையே தற்போதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளது.
Also Read
-
"மோடி நாட்டின் பிரதமர் என்பதை மறந்து பழைய குஜராத் கலவரக் காலத்திலேயே இருக்கிறார்" - முரசொலி விமர்சனம் !
-
சென்னை ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிஸ் ஜென்... கோப்பை வழங்கி முதலமைச்சர் பாராட்டு !
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!