India
தீதியிடம் பணிந்த மோடி, அமித்ஷா... 202 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை!
மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களான சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.கவுக்கும் இடையே கடும்போட்டி நிலவிவருகிறது.
மேற்குவங்க மாநிலத்தில் ஆட்சி அமைக்க 148 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போதைய நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 202 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. இத்தகவல் அடிப்படையில் பார்த்தால் மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரப்போகிறார்.
தற்போது வெளியான தேர்தல் முடிவுகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 202 இடங்களிலும், பாஜக 77 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. இதனால் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் அறுதிப் பெரும்பான்மையை பெற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.
மேற்கு வங்கத்தை எப்படியேனும் கைப்பற்றிட பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா பல வியூகங்களை மேற்கொண்டனர். மேலும் தீவிரமான பரப்புரையும் செய்தனார். ஆனால் பா.ஜ.கவின் வியூகத்தை எல்லாம் மம்தா பானர்ஜி தவிடுபொடியாக்கியுள்ளார் என்பதையே தற்போதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளது.
Also Read
-
“தமிழோடு விளையாடியவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை” : தமிழ்த்தாய் வாழ்த்து அவமரியாதை - திமுக கண்டனம்
-
ராமநாதபுரத்தில் பரபரப்பு : ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் கையும் களவுமாகக் கைது!
-
”CSK நிர்வாகத்திற்கும் தோனிக்கும் பிரச்சனையா.. அஸ்வின் கிளப்பிய புதிய புயல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!”
-
ஓடி ஒளியாதீர்கள் CM Sir : மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - கனிமொழி என்.வி.என்.சோமு கண்டனம்!
-
”இந்திய இளைஞர்கள் உருவாக்கிய ’காக்ரோச் ஜனதா கட்சி’ - CJP.. அதிரவைக்கும் காரணங்கள்” - முழு விவரம் அறிக!