India
“தேர்தலில் தோல்வி எனத் தெரிந்து மே.வங்கத்தில் கொரோனாவை பரப்பிய பா.ஜ.க.,வினர்” : மம்தா பானர்ஜி தாக்கு!
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக அம்மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. அதில் தற்போது வரை 4 கட்டத்தேர்தல் நிறைவடைந்துள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், ஆட்சியில் கைபற்ற வேண்டும் என பா.ஜ.கவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு அந்நியர்களே (பா.ஜ.கவே) காரணம் எனக் குற்றம் சாட்டினார். மேலும், பா.ஜ.கவை விமர்சித்து பேசிய மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனாவைக் கொண்டு வந்து விட்டுவீட்டீர்கள்.
திரிணாமுல் தலைமையிலான அரசே நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. அப்போதே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தால் மீண்டும் கொரோனா பாதிப்பு வந்திருக்காது. தேர்தலுக்காக தற்போது வந்துள்ள அந்நியர்கள், கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது எங்கிருந்தார்கள்? ஏன் அப்போது வரவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
“தொடர்ந்து 2 ஆண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
”அரிய வகை புற்றுநோய்.. டைட்டானியம் மூலம் வெற்றிகர சிகிச்சை.. அரசு மருத்துவமனை புதிய சாதனை!”
-
”அரசின் அதிரடி திட்டங்கள்.. அரசுப்பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை… வியத்தகு எண்ணிக்கை!”
-
”மணிப்பூரில் தொடரும் மோதல்.. இரும்பு மனிதர் அமித்ஷாவின் அக்கறையின்மையா? தகுதியின்மையா?” - முரசொலி கேள்வி!
-
மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை : தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள முக்கிய தகவல் இதோ!