India
“பா.ஜ.க வீழ்ந்தால் தேசம் தப்பி பிழைக்கும்” : மோடி அரசு மீது மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் தாக்கு!
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல் 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இன்னமும் 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற வேண்டும்.பா.ஜ.க.வின் திட்டம் பலிக்காது! இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடுமயாகப் போராடி வருகிறது.
அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத்தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும்மோதல் நிலவி வருகிறது. இந்தநிலையில் நேற்றுநடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி மேற்கு வங்காள 4 கட்ட தேர்தல்களிலும் மக்கள் மம்தாஜியை கிளீன் போல்டாக்கிவிட்டனர், மம்தா பானர்ஜியின் ஆட்டம் முடியப் போகிறது, மே 2-ம் தேதி அவர் வீட்டிற்கு சென்றுவிடுவார் எனப் பேசினார்.
மம்தா பானர்ஜி இதற்கு பதிலளித்துள்ளார். டம்டம் தொகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “பிரதமர் மோடி வங்காள தேசத்திற்கு அண்மையில் சென்று வந்தார். இப்போது அங்கு வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. அவர் எங்கு சென்றாலும் இப்படி தான் நடக்கிறது. வங்காள தேசத்திற்கு சென்று தான் வங்க மக்களுக்கு ஆதரவானவர் என காட்டுகிறார்.
நான் மிகவும் வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன். இது போன்ற ஒரு பிரதமரை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. எல்லை மீறி பேசுகிறார். நான் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாகவே செயல்பட்டு வருகிறேன். மேற்குவங்க மக்களுக்கு நான் என்ன செய்யவில்லை. பா.ஜ.க. வீழ்ந்தால் தேசம் தப்பும்!ஒன்றை மட்டும் தான் செய்யவில்லை. பா.ஜ.க.வை விரட்டியடிக்கவில்லை. இப்போது அந்தப்பணியையும் செய்கிறேன். பா.ஜ.க வீழ்ந்தால் தேசம் தப்பிபிழைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
-
”மணிப்பூரில் ஓராண்டாக அமைதியைக் கொண்டுவர மறுத்து விட்ட பா.ஜ.க” : ப.சிதம்பரம்!
-
இன்றுடன் ஓராண்டாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறை : வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
வயநாடு தொடர்ந்து மற்றொரு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி : எந்த தொகுதி? என்ன காரணம்?
-
மணிப்பூர் வன்முறை - கைகட்டி வேடிக்கை பார்த்த ஒன்றிய பா.ஜ.க. அரசும் குற்றவாளி அல்லவா? : முரசொலி!