India
வேளாண் சட்ட நகலை எரித்து ஹோலி கொண்டாடிய விவசாயிகள் : தொடரும் போராட்டம்... மவுனம் காக்கும் மோடி அரசு!
மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கொண்டு வந்த விவசாய விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 120 நாட்களுக்கு மேலாக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாகும். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர விவசாயிகள் சங்கத்தினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த 11 சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. விவசாயிகளின் கோரிக்கைக்குச் செவி சாய்க்காமல் தொடர்ந்து மோடி அரசு அராஜக போக்கையே கையாண்டுவருகிறது.
இந்நிலையில் மத்திய அரசின் அராஜகத்திற்கு முடிவு கட்டவேண்டும் என்ற நோக்கத்தில் ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதையொட்டி, அந்த மாநிலங்களில் பா.ஜ.கவுக்கு எதிராக விவசாயச் சங்கத் தலைவர்கள் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்திலும் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக டெல்லி விவசாயிகளின் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராஜ்வீந்தர்சிங் கோல்டன், பா.ஜ.கவையும், அ.தி.மு.க அரசின் விவசாய நாடகத்தை அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், ஹோலி பண்டிகைக்காக வட இந்திய மாநிலங்கள் களைகட்டியுள்ள நிலையில், வேளாண் சட்ட நகல்களை எரித்து விவசாயிகள் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளனர். டெல்லி எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் வேளாண் சட்டங்களின் நகலை எரித்து ஹோலி பண்டிகையைக் கொண்டாடியதாக விவசாயச் சங்க கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, குறைந்தபட்ச ஆதார விலைக்குப் புதிதாகத் தனிச் சட்டம் இயற்றப்படும் வரை போராட்டம் தொடரும் எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
"2007 T20 உலகக்கோப்பை இறுதியில் தோனி இதைத்தான் செய்வார் என தெரியும்" - மிஸ்பா-உல்-ஹக் கருத்து !
-
"பும்ரா, ரஷித்கான் போன்ற பௌலர்கள் எல்லா அணிகளிலும் இல்லை" - Impact Player விதிமுறைக்கு கோலி எதிர்ப்பு !
-
“இரண்டு கதாபாத்திரமும் ஒன்றுதான்” : மோடியை மறைமுகமாக விமர்சித்த சுப்ரியா ஸ்ரீனேட் !
-
சாலையில் நடந்து சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை : உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் தொடர் குளறுபடி - திடீரென்று உயர்ந்த 1 கோடி வாக்குகள்: மோடி அரசு செய்த சதி என்ன?